பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130


பெண் : ஓடுகிற தண்ணியிலே ஒறச்சு விட்டேன் சந்தனத்தை
சேந்துதோ?... சேரலையோ?... செவத்த மச்சான் நெத்தியிலே...!


ஆண் : சந்தனப் பொட்டு வச்சு
சொந்த மச்சான் வந்திருக்கேன்!
சந்தோஷமாக நீயும் வந்து சேரு இக்கரைக்கு!


பெண் : இக் கரையில் நானிருக்க
அக் கரையில் நீ யிருக்க
இருவரையும் பிரிக்க இடையில் இந்த ஆறிருக்கு!


ஆண் : ஆறாலும் நம்மைப் பிரிக்க
ஆகு மோடி மத்தியிலே!
ஆசையுள்ள பெண் மயிலே
பாரு வாறேன் பக்கத்திலே!


பெண் : பக்கத்திலே வந்தவுடன்
பாச முள்ள எம் மனசு
சொக்காமல் சொக்கிடுது சுத்திச் சுத்தி ஆடிடுது!
பக்குவமா நேரம் பார்த்துப்
பாட்டுப் பாட வந்த மச்சான்!-என் சொந்த மச்சான்
வெக்கமா இருக்குதுங்க
விலகிக் கொஞ்சம் போங்க மச்சான்!