பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

ஆண் : காயிலே இனிப்பதென்ன?
கனியானால் கசப்பதென்ன?
வாயாடி வம்பு பேசும் மானே!
பதில் சொல்லு!


பெண் : காலத்தின் கோலத்தினால்
கட்டழகு குலைவதினால்
எட்டிக் கனியாக ஆண்கள்
எண்ணும் பெண்ணினந்தான்!


ஆண் : நீலமாய்த் தெரிவதென்ன?
நீர் வீழ்ச்சி யாவ தென்ன?
நிமிர்ந்தே என்னைப் பார்த்து
நேரான பதில் சொல்லு!


பெண் : நெஞ்சிலே அனுதினமும்
கொஞ்சும் இன்ப துன்ப மெனும்
நிலையைக் காட்டுகின்ற
பெண்களின் கண்கள்தான்!


ஆண் : பிரிந்தால் கனலாகி
நெருங்கி நின்றால் பனியாகி
கருத்தில் விளையாடக்
காணும் பொருளென்ன?