பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136


ஆண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான்
உன்னைப் போல பார்க்கலே!
கேட்டாலும் கேட்டேன்!-உன்
பேச்சைப் போல கேக்கலே!


பெண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான்
ஒன்னைப் போல பாக்கலே!
கேட்டாலும் கேட்டேன்-ஒன்
பேச்சைப் போலே கேக்கலே!


ஆண் : பூத்திருக்கும் மலர் முகமோ
பொன்னைப் போல மின்னுது-உன்
போக்கை மட்டும் பார்க்கையிலே
எதையெதையோ எண்ணுது!


பெண் : படபடத்து வெடவெடத்து
சடசடத்துப் போவுது!
பக்கத்திலே நீயிருந்தா
இன்னான்னமோ ஆவுது!


ஆண் : காணுகின்ற பொருளில் எல்லாம்
உன்னுருவம் தெரியுது!
காதலென்றால் என்னவென்று
எனக்கு இன்று புரியுது!