இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
138
- ராதை : சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
- சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?
- நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்)
- சந் : சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
- சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா?
- ராதை: என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா?
- ஏழை என் மீது இன்னும் சந்தேகமா?
- சந் : உன் மனக் கண்களை மூடிய மேகமே
- தன்னால் விலகிப் போனதா என் தங்கமே! (சந்)
- ராதை: சந்திரன் ஒளியை உண்டு வாழும்
- சாதகப் பறவை ஆனேனே-நானே!
- சந் : அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
- ஆனந்த உலகைக் காண்போம் நாமே!
- ராதை: இன்பம் உண்டு என்றுமினி துன்பமேயில்லை!
- சந் : இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை!
- இருவரும்: சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
- சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?
- நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்)
குல மகள் ராதை-1963
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன், P. சுசிலா