பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138


ராதை : சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?
நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்)


சந் : சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா?
ராதை: என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா?
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா?
சந் : உன் மனக் கண்களை மூடிய மேகமே
தன்னால் விலகிப் போனதா என் தங்கமே! (சந்)


ராதை: சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே-நானே!
சந் : அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகைக் காண்போம் நாமே!
ராதை: இன்பம் உண்டு என்றுமினி துன்பமேயில்லை!
சந் : இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை!


இருவரும்: சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?
நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்)
குல மகள் ராதை-1963
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன், P. சுசிலா