பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141


கவிதா : பார்க்கப் பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி!
வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே!
கோரஸ் : வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே!
(பார்க்க)
கவிதா : பாத்தி கட்டித் தோட்டக்காரன்
பரிவுடனே வளர்த்த கொடி!
லீலா : பொங்கும் இளம் பருவத்தினால்
பூத்து நின்று குலுங்குதடி!
கோரஸ் : புதுப்புது கனவுகள் காணுதடி!
காணுதடி காணுதடி!
கவிதா : ஆதவனைக் கண்டு
ஆசை மிகக் கொண்டு
தாமரைப் பெண் இதழ் விரியும்!
கோரஸ் : முகம் மலரும்
லீலா : காதலனைக் கண்டு
நீயது போல் நின்று
கண்ணாலே பேசும் ஒரு
கோரஸ் : நாளும் வரும்!