பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143


ஆண் : சும்மா சும்மா சிரிச்சுக்கிட்டு
சொகுசு நடை போட்டுக் கிட்டு
துள்ளித் துள்ளி ஆடிவரும்! உன்னைக் கண்டா
சுத்திச் சுத்திப் பார்க்காத கண்ணும் உண்டா?


பெண் : கும்மாளம் போட்டுக்கிட்டு
குதிரை வண்டி ஒட்டிக்கிட்டு
தெம்மாங்கு பாடி வரும் உன்னைக் கண்டா
திரும்பிப் பார்க்காத கண்ணும் உண்டா?
(சும்மா)


ஆண் : மஞ்சள் பூசிக் குளிச்ச முகம் மினுமினுக்க
மயக்க மூட்டும் பார்வையிலே நிலவெரிக்க
மரிக் கொழுந்து கொண்டையிலே கமகமக்க!
குறும்புப் பேச்சைக் கேட்பவங்க கிறுகிறுக்க!
(சும்மா)


பெண் : சிலுக்குச்சட்டை காத்துப்பட்டு சிலுசிலுக்க-தங்கச்
சிலையைப் போல தேகக்கட்டு பளபளக்க
தெருவழியே வண்டிச் சத்தம் கடகடக்க-கையில்
சின்னஞ் சிறு சாட்டை வாரு துடிதுடிக்க!
(சும்மா)