பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146


ஆண் : மங்கிய நீல இரவினிலே
மலர்ந்தே ஒளி தரும் முழு நிலவே!
பெண் : வான நிலவும் ஒளி பெறவே
தானம் அளிக்கும் செங்கதிரே!!
ஆண் : துள்ளி யோடும் காவிரியே!
பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடலே!
பிறந்த நாள்-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசீலா