பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149


அற்புதக் காட்சி யொன்று கண்டேன்!
ஆனந்த லாகிரி கொண்டேன்-சகியே
(அற்புதக் காட்சி)


சிற்பிகள் செய்யாத சிலை யொன்று கண்டேன்!
சிங்கார வாய் திறந்து பேசவுங் கண்டேன்!
கற்பனைக் கவிஞரின் காவியத் தலைவன்-என்
கண்முன்னே உயிரோடு வரவுங் கண்டேன் சகியே
(அற்புதக் காட்சி)


முத்துக்கள் கோர்த்தது போல் மோகனப் பல்வரிசை!
முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கைவரிசை!
சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை!
தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை!
(அற்புதக் காட்சி)


சாரங்கதரா-1958
இசை : G. ராமநாதன்
பாடியவர் : P. பானுமதி