இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
149
- அற்புதக் காட்சி யொன்று கண்டேன்!
- ஆனந்த லாகிரி கொண்டேன்-சகியே
- (அற்புதக் காட்சி)
- சிற்பிகள் செய்யாத சிலை யொன்று கண்டேன்!
- சிங்கார வாய் திறந்து பேசவுங் கண்டேன்!
- கற்பனைக் கவிஞரின் காவியத் தலைவன்-என்
- கண்முன்னே உயிரோடு வரவுங் கண்டேன் சகியே
- (அற்புதக் காட்சி)
- முத்துக்கள் கோர்த்தது போல் மோகனப் பல்வரிசை!
- முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கைவரிசை!
- சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை!
- தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை!
- (அற்புதக் காட்சி)
சாரங்கதரா-1958
- இசை : G. ராமநாதன்
- பாடியவர் : P. பானுமதி