பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156


தேன்கூடு! நல்ல தேன்கூடு!
திருமகள் வாழ்ந்திடும் என்வீடு!


காணும்போது இனிக்கும்!-மதுரைக்
கதம்பம் போல மணக்கும்!
கண்ணைக் கவ்வி இழுக்கும்!-தன்னை
உண்ணச் சொல்லி அழைக்கும்!(தேன்)


வாடும் மனதை மூடும் கவலை
மதுவில் கரைந்தே பறந்தோட
வாழ்வில் நிம்மதி தேடும் செல்வச்
சீமான் மயங்கி உறவாட!(தேன்)


கலையால் வீசும் வலையால்-காதல்
விலையே பேசும் கிளி நான்!
கலையா போதை நிலையால் ஆளைக்
கவரும் காந்தச் சிலைதான்!


போனது எல்லாம் போகட்டும்!-மனம்
புதுப்புது கனவுகள் காணட்டும்!
ஆனது எல்லாம் ஆகட்டும்!
அதில் அதிசயக் காட்சிகள் தோணட்டும்!
ஆட்டுக்கார அலமேலு-1976
இசை : சங்கர், கணேஷ் -
பாடியவர்: P. சுசிலா