பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160


ஆண் : ஊருக்கும் தெரியாது!
யாருக்கும் புரியாது!
உன்னை எண்ணிக் கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது!
பெண் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது!
உன்னை எண்ணிக் கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது!-ஊருக்கும்
ஆண் : உன்னுடனே நானிருக்கும்
என்னுடனே நீ யிருக்கும்
பெண் : உண்மையை உலகம் அறியாது!
உனையன்றி வாழ்க்கையுமேது? -ஊருக்கும்
பெண் : காண்பதெல்லாம் உன் உருவம்!
கேட்ப தெல்லாம் உனது குரல்!
ஆண் : கண்களை உறக்கம் தழுவாது!
அன்புள்ளம் தவித்திடும் போது!
இருவரும் : ஊருக்கும் தெரியாது!
யாருக்கும் புரியாது!
மாடப்புறா- 1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா