இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
160
- ஆண் : ஊருக்கும் தெரியாது!
- யாருக்கும் புரியாது!
- உன்னை எண்ணிக் கனவு கண்டு
- உள்ளம் ஏங்குவது!
- பெண் : ஊருக்கும் தெரியாது
- யாருக்கும் புரியாது!
- உன்னை எண்ணிக் கனவு கண்டு
- உள்ளம் ஏங்குவது!-ஊருக்கும்
- ஆண் : உன்னுடனே நானிருக்கும்
- என்னுடனே நீ யிருக்கும்
- பெண் : உண்மையை உலகம் அறியாது!
- உனையன்றி வாழ்க்கையுமேது? -ஊருக்கும்
- பெண் : காண்பதெல்லாம் உன் உருவம்!
- கேட்ப தெல்லாம் உனது குரல்!
- ஆண் : கண்களை உறக்கம் தழுவாது!
- அன்புள்ளம் தவித்திடும் போது!
- இருவரும் : ஊருக்கும் தெரியாது!
- யாருக்கும் புரியாது!
மாடப்புறா- 1962
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா