இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
161
- பெண்: கண்ணாலே நான் கண்ட கணமே!-உயிர்க்
- காதல் கொண்ட தென் மனமே! இது
- முன்னாளில் உண்டான உறவோ-இதன்
- முடிவும் எங்கோ? எதுவோ?
- ஆண் : எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
- என்னோடு வாவென்று சொல்லுதே!-இது
- முன்னாளில் உண்டான உறவோ?-இதன்
- முடிவும் எங்கோ எதுவோ?
- பெண்: யாரென்று கேட்காததேனோ?
- யாரானால் என்னென்றுதானோ?
- நேராக நின்று யாரென்று கேட்டால்
- கூரான வேல் பாயும் என்றோ?
- ஆண் : யாரான போதென்ன கண்ணே!
- நானுண்ணும் ஆனந்தத் தேனே!
- நீ வேறு அல்ல! நான் வேறு அல்ல!
- வேறென்ன நானின்னும் சொல்ல!-இனி
- எந்நாளும் நீ இங்கு எனக்கே!
- பெண் : என் இதயமெல்லாம் உமக்கே!
பார்த்திபன் கனவு-1960
- இசை : வேதா
- பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & சுசிலா