இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
163
- தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்
- பொழிவதும் குரலாலே!
- சிந்தையைக் கிளறும் மதுரச நாதம்
- எழுவதும் விரலாலே!(தேன்)
- வேய்ங்குழலோசை போலே காதிலே
- வித விதமாகிய நாத வெள்ளமே
- பாய்ந்திடும் போதில் நெஞ்சிலின்பமே
- உறவாடுமே! சுகம் கூடுமே!
- உல்லாசம் தன்னாலே உண்டாகுமே!(தேன்)
- கான சஞ்சாரம் காதல் சீர் தரும்!
- ஆனந்த தீரம்! அமுத சாகரம்!
- மானில உயிர்கள் மயக்கமே பெறும்!
- மலர் போலவே மணம் வீசும்
- மங்காத சிங்கார சங்கீதமே!(தேன்)
டாக்டர் சாவித்திரி-1955
- இசை : K.V. மகாதேவன்
- பாடியவர் : P. சுசிலா