பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163


தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்
பொழிவதும் குரலாலே!
சிந்தையைக் கிளறும் மதுரச நாதம்
எழுவதும் விரலாலே!(தேன்)
வேய்ங்குழலோசை போலே காதிலே
வித விதமாகிய நாத வெள்ளமே
பாய்ந்திடும் போதில் நெஞ்சிலின்பமே
உறவாடுமே! சுகம் கூடுமே!
உல்லாசம் தன்னாலே உண்டாகுமே!(தேன்)
கான சஞ்சாரம் காதல் சீர் தரும்!
ஆனந்த தீரம்! அமுத சாகரம்!
மானில உயிர்கள் மயக்கமே பெறும்!
மலர் போலவே மணம் வீசும்
மங்காத சிங்கார சங்கீதமே!(தேன்)
டாக்டர் சாவித்திரி-1955
இசை : K.V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா