பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164


எத்தனை எத்தனை இன்பமடா!-இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா!(எத்தனை)
மரம் படைத்தான்! ஒரு கொடி படைத்தான்! -அந்த
மரத்தைத் தழுவி அதைப் படர வைத்தான்! படர வைத்தான்!
மலர் படைத்தான்! நறு மணங் கொடுத்தான்-அதில்
வடியும் தேனையும் உனக்களித்தான்!(எத்தனை)
உன்னைப் படைத்தான்! ஒரு பெண்ணைப் படைத்தான்!-காதல்
உறவு கொள்ளவும் வழிவகுத்தான்! வழிவகுத்தான்!
பொன்னைப் படைத்தான்! பல பொருள் படைத்தான்-இந்த
பூமியில் சொர்க்கம் காண வைத்தான்!(எத்தனை)
கண் கொடுத்தான் நீ காண்பதற்கு! பல
காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு! களிப்பதற்கு!
மனங் கொடுத்தான் உன்னை நினைப்பதற்கு-நல்ல
மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு(எத்தனை)
யாருக்குச் சொந்தம்-1963
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்