பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165


ஆடும் மயிலே அழகு நிலாவே
வாடா மலரே வருக!
பாடும் குயிலே செந்தமிழ் பேசும்
பைங்கிளியே நீ வருக!(ஆடும்)
மாங்கனிபோலே பளப்பளப்பாக
மின்னும் உந்தன் கன்னம்-அதில்
வண்டுகள் போலே தாவிடும் எங்கள்
மன்னரின் இரு கண்ணும்!
மதுரசம் பருகிட அவர் மனம் எண்ணும்!
இருவரும் உலகில் இணைவது திண்ணம்!
மாதவி நீதானே! கோவலன் அவர்தானே! (ஆடும்)
பஞ்சணை மீது கொஞ்சிக் குலாவி
பாலும் பழமும் தருவார்-இவர்
பாவை உந்தன் கோவை இதழில்
பரிசாய் முத்தம் பெறுவார்
பரவச வெறியில் தனை மறந்தாடும்
உறவினில் புதுமுறை கவிதை பாடும்
ஊர்வசி நீதானே ! இந்திரன் அவர்தானே! (ஆடும்)
மன்னாதி மன்னன்-1960
இசை : M. S. விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள் : ஜமுனாராணி & குழுவினர்