இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
165
- ஆடும் மயிலே அழகு நிலாவே
- வாடா மலரே வருக!
- பாடும் குயிலே செந்தமிழ் பேசும்
- பைங்கிளியே நீ வருக!(ஆடும்)
- மாங்கனிபோலே பளப்பளப்பாக
- மின்னும் உந்தன் கன்னம்-அதில்
- வண்டுகள் போலே தாவிடும் எங்கள்
- மன்னரின் இரு கண்ணும்!
- மதுரசம் பருகிட அவர் மனம் எண்ணும்!
- இருவரும் உலகில் இணைவது திண்ணம்!
- மாதவி நீதானே! கோவலன் அவர்தானே! (ஆடும்)
- பஞ்சணை மீது கொஞ்சிக் குலாவி
- பாலும் பழமும் தருவார்-இவர்
- பாவை உந்தன் கோவை இதழில்
- பரிசாய் முத்தம் பெறுவார்
- பரவச வெறியில் தனை மறந்தாடும்
- உறவினில் புதுமுறை கவிதை பாடும்
- ஊர்வசி நீதானே ! இந்திரன் அவர்தானே! (ஆடும்)
மன்னாதி மன்னன்-1960
- இசை : M. S. விஸ்வநாதன் ராமமூர்த்தி
- பாடியவர்கள் : ஜமுனாராணி & குழுவினர்