இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
168
- வசந்தா : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!
- இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!
- மீனா : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!
- இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!
- வசந்தா : விதைப்ப தெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே!
- முளைப்ப தெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே!
- மீனா : மலர்வ தெல்லாம் மணப்பதில்லை பூமி தன்னிலே!
- வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே!
- ஒரு நிலாதான் உலவ முடியும் நீலவானிலே
- உணர்ந்த பின்னால் கலங்கலாமோ உள்ளம் வீணிலே!
- வசந்தா : உருகி உருகிக் கரைவதாலே பலனுமில்லையே!
- ஓடிப்போன காலம் மீண்டும் வருவதில்லையே!