பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172


நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே-உன்னை
நீங்கிடாத துன்பம் பெருகுதே!
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே-வாழ்க்கை
உடைந்து போன சிலையானதே!
நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே!
அமைதி யின்றியே அலைய நேர்ந்ததே!(நினை)
எங்கிருந்து நீவாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?-உனைக்காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?(நினை)
சதாரம்-1956


இசை : G. ராமநாதன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்