பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193


மரத்தெப் படெச்சவன் தான்
மனுசாளைப் படைச்சிருக்கான்!
வாறதெ ஏத்துக்கதான்
மனசெ கொடுத்திருக்கான் !
தெட்டிக்கினு போறதுக்கு
திருடன் வருவான்னு
துட்டுள்ள சீமாங்க
தூங்காமெ முயிப்பாங்க!
துட்டும் கையிலே இல்லே!
தூக்கத்துக்கும் பஞ்சமில்லே!
பொட்டியும் தேவையில்லே!
பூட்டுக்கும் வேலையில்லே!
ஆயிரம் ரூபாய்-1964
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா