பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210


சொன்னாலும் கேக்காத உலகமுங்க!
சொல்லாமப் போனாலும் புரியாதுங்க!-இதில்
முன்னாலும் போகாமெ பின்னாலும் போகாமெ
முழிக்கிற கும்பல் ஏராளங்க!


சோம்பேறி ஆகுதுங்க!-சிலது
தூங்காமத் தூங்குதுங்க!-புதுத்
தொழிலைத் துவக்கிப் பலர்
துயரத்தைத் தீர்க்காமெ
துட்டுகளைப் பெட்டியிலே பூட்டுதுங்க!(சொ)


பாடுபடும் ஏழைகளும்!-பணம்
உள்ளவரும் சேர்ந்திடுங்க!-புதுப்
பாதையை வகுத்திடுங்க!
பங்கு போட்டுச் சாப்பிடுங்க!
பாரபட்சமில்லாமெ வாழ்ந்திடுங்க!-என்று(சொ)
ஆடவந்த தெய்வம்-1960


இசை: K. V. மகாதேவன்