பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216


ஆசையைக் கொன்றுவிடு!-இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு!
பாசத்தை நீக்கிவிடு!-துன்பம் இல்லாப்
பாதையைக் காட்டிவிடு!


அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்!
அன்பையும் பார்க்காது!-அதன்
வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை
வாழவும் வைக்காது!


ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்!
காதுக்குக் கேட்காது! காதலின்கீதம்
நாதமில்லாத வீணையும் ஆகி
வாழ்வது ஏன் இங்கு? வாழ்ந்தது போதும்!
வாழ்ந்தது போதும்! வாழ்ந்தது போதும்!
ஆடவந்த தெய்வம்-1960
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்