இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
216
- ஆசையைக் கொன்றுவிடு!-இல்லையென்றால்
- ஆவியைப் போக்கிவிடு!
- பாசத்தை நீக்கிவிடு!-துன்பம் இல்லாப்
- பாதையைக் காட்டிவிடு!
- அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்!
- அன்பையும் பார்க்காது!-அதன்
- வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை
- வாழவும் வைக்காது!
- ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்!
- காதுக்குக் கேட்காது! காதலின்கீதம்
- நாதமில்லாத வீணையும் ஆகி
- வாழ்வது ஏன் இங்கு? வாழ்ந்தது போதும்!
- வாழ்ந்தது போதும்! வாழ்ந்தது போதும்!
ஆடவந்த தெய்வம்-1960
- இசை: K. V. மகாதேவன்
- பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்