பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


நானும் அய்யாவை அழைத்துக் கொண்டு சென்றேன். அங்கு பாடல்களைக் கேட்டோம். 8 பாடல்கள் இந்தி மெட்டுகள். இரண்டு பாடல்கள்தான் டியூன் செய்ய வேண்டியவை.

அய்யா அவர்கள், "இந்த மெட்டுகளுக்குப் பாடல் எழுதுவது எனக்கு ஆகாத வேலை. அதை இவர்தான் செய்ய வேண்டும். எழுதி, டியூன் போடும் பாடல்கள் மட்டும் நான் எழுதுகிறேன்" எனச் சொல்லி விட்டார். T.R.S. அவர்கள் சந்தோஷப்பட்டு, என்னையே பாடல் முழுவதும் எழுத வைத்தார். அய்யாவிடம் ஒரே ஒரு பாடல் மட்டும் எழுதி வாங்கிக் கொண்டு, மூவாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள் ஆனால் அந்தப் பாடல், படத்தில் இடம் பெறவில்லை.

பிறகு தொடர்ச்சியாக, வண்ணக்கிளி, எங்கள் குலதேவி, கைதி கண்ணாயிரம், ஆகிய பல படங்களுக்குப் படம் முழுவதற்கும் நானே பாடல்கள் எழுதினேன். அதில் "வண்ணகிளி" படத்திற்குத்தான், சேலத்தில் மியூசிக் டைரக்டராக K. V. மகாதேவன் நியமிக்கப்பட்டார்.

சூழ்நிலையால், எங்கள் யூனிட் உடைந்து போனது. எனக்கும் 'LOW PRESSURE' ஏற்பட்டு, நான் ஊருக்குத் திரும்பிச் செல்ல நேர்ந்தது. ஊருக்குப் போகும் போது, கடைசியாக நான் இயற்றிய பாடல் "ஆனாக்க அந்தமடம்! ஆகாட்டி சந்தமடம்! அதுவும்கூட இல்லாட்டி ப்ளாட்பாரம் சொந்த இடம்" என்று "ஆயிரம் ரூபாய்" படத்தில் வரும் பாடல்தான். நான் பணம் கூட வாங்கிக் கொள்ளாமல் ஊருக்குச் சென்று விட்டேன்.

யாரை நான் நல்ல நண்பர்கள் என நினைத்தேனோ, அவர்களுடைய பொறாமையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டுகள், நான் ஊரிலேயே இருந்து விட்டேன். 1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுற்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கும் நிலை வந்த பொழுது