பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

307



உய்.....
ஆடிவரும் பூங்கொடி அழகினிலே மனம் ஆடுதா ?தடுமாறுதா ?
ஆஹா அலைபோலே பின்னாலே அய்யாவின் மனம் போகுதா ? :ஆசைவலை பின்னி ஜாடைகளும் பண்ணி ஆடுதா ?-திண்டாடுதா ?
வாருங்க மைனர் சார்-உங்க வாழ்க்கையே ஜாலி தான் !
பாருங்க பர்ஸையே அது என்றுமே காலிதான் !
தனிக் கவர்ச்சியுண்டு இவர் face லே
அதில் காலம் ஓடுதுங்க ஓசிலே!
உய்......
உண்மையைச் சொன்னதை எண்ணி
எண்ணியே கோபமா? மனஸ்தாபமா ?
ஆட்டத்தில் நாட்டமா ? ஆள் மீது கண்ணோட்டமா ?
பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா ?
கை தாளம் தவறாகப் போடுதே !
கலை ஞானி போல தலையாடுதே!... உய்...
அந்தரத்து மின்னலை சொந்தங் கொள்ள எண்ணினால்
நடக்குமா? அது கிடைக்குமா-உய்.....