பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

சுந்தரி சவுந்தரி நிரந்தரியே!
சூலி யெனும் உமையே.குமரியே!  (சுந்தரி)
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
அமரியெனும் மாயே

                பகவதி நீயே
                அருள்புரிவாயே
                பைரவித் தாயே
                உன் பாதம் சரணமே  (சுந்தரி)

சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சேர்ந்த கலை ஞானம்

               தானம் நிதானம்
               மாதரின் மானம்
               காத்திட வேணும்
               கண் காணும் தெய்வமே  (சுந்தரி)


                                                   தூக்கு தூக்கி—1954

இசை : G. ராமநாத அய்யர்
பாடியவர்கள்  : T. M. செளந்தரராஜன்
P. லீலா குழுவினர்