பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


பொன்னு வெளையிற பூமியடா-வெவசாயத்தே
பொறுப்பா கவனிச்சுச் செய்யிறோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு-எல்லாம்
நன்மைகளும் நாடி வந்து கூடுதடா...!

(பாட்டு)



மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு-பசுந்
தழையெப் போட்டுப் பாடுபடு செல்லக்கண்ணு

ஆத்தூரு கிச்சிடிச் சம்பா பாத்து வாங்கி வெதை வெதைச்சு
நாத்தைப் பறிச்சு நட்டுப் போடு சின்னக்கண்ணு- தண்ணியே
ஏத்தம் புடிச்சு எறைச்சுப் போடு செல்லக்கண்ணு ,
கருதெ நெல்லா வெளையவச்சு மருதெ சில்லா ஆளெவெச்சு
அறுத்துப்போடு களத்து மேட்டிலே சின்னக் கண்ணு நல்லா
அடிச்சுத் தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு!

பொதியெ ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு-நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு சின்னக்கண்ணு அவுங்க
ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு.

                     மக்களைப் பெற்ற மகராசி-1957

இசை :K. V. மகாதேவன்
பாடியவர்:T. M. செளந்தரராஜன்