பக்கம்:ஆண் சிங்கம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


பிள்ளையின் போக்கு நண்பருக்கு அதிசயமாகப்பட்டது. என்ன விஷயம் என அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ‘இது யார் சங்கிவி? என்று கேட்டார்.

‘உம்மிடம் சொல்வதற்கென்ன?’ என்று முன்னுரை கூறனார் கி. பிள்ளை. ‘நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. அந் நினைவுகளை நான் மறந்து விட ஆசைப்பட்டேன். என் மனக்குகை ஆழத்தில் அது புதையுண்டு விட்டதாகவே தோன்றியது. ஆனால் இந்தச் சங்கிலி அந் நினைவைப் படம் எடுத்து ஆடவைக்கும் மகுடியாகி விட்டதே!... –

மீண்டும் ஒரு பெருமூச்சு. நாராயணன் பார்வை அவரை அதிசயமாகவும், புதிதாக ஒருவரைப் பார்பபது போலவும் தொட்டது.அதைப் பொருட்படுத்தாமல் கிருஷ்ணபிள்ளை பேசினார். தமது நினைவுகளை உரக்கச் சிந்திப்பவர் போல், தமக்குத் தாமே பேசிக் கொள்ளும் தொனியில், அவர் சொல்லலானார்.

‘இப்போ சமீபத்தில் நிகழ்ந்தது போல் இருக்கு. யோசித் துப் பார்த்தால், பதினைத்து, பதினாறு வருஷங்கள் ஓடியிருப்பதாகப் புரிகிறது...ஊம்! காலம் ரொம்ப வேகமாகத் தான் ஒடுகிறது. அப்பொழுது எனக்கு இரு பத்தாறு வயசு, உமாவுக்கு என்ன, பதினேழு பதினெட்டு வயதிருக்கும். இருந்தாலும் அவள் சிறுமிதான். சரியான விளையாட்டுப் பிள்ளை...!”

‘உமாவா? யார் அது? நான் அவளைப் பார்த்திருக் கிறேனா? என்று கேட்டர் நாராயணன்.

‘நீர் பார்த்திருக்க முடியாது. நான் அப்பொழுது வேருெரு ஊரில் தங்கியிருந்தேன். ஏதோ அழுது வடிந்த ஆபீஸ் ஒன்றில் என்னவோ இழவெடுத்த உத்தியோகம் என்று வைத்துக் கொள்ளுமேன். ஆபீஸ், மேஜை, நாற்காலி எல்ல்ா ஜபர்தஸ்துகளுக்கும் குறை எதுவும் கிடையாது. அதிகாரி என்று ஒருவர் இருந்தார். அவரோ வருஷத்தில் முக்கால் வாசி நாள் லீவில் போய் விடுவார். பியூன் ஊர் சுற்றப் போய் விடு

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/126&oldid=1072877" இலிருந்து மீள்விக்கப்பட்டது