பக்கம்:ஆண் சிங்கம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


வடித்தபடியே வெளியேறினாள். அறுந்த சங்கிலியை எடுத்துச் செல்லவுமில்லை.

விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது மனிதர் வாழ்க்கையில் குறுக்கிட்டு விளையாடுவதில் அதிக உற்சாகம் காட்டுகிறது என்றும் தோன்றுகிறது. நமக்குப் புரியாத–நம்மால் புரிந்து கொள்ள முடியாத–பல விஷயங்களுக்கு நாம் இப்படித்தான் சமாதானம் கூறிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

உமாவை என் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட வைத்த விதி குரூரமாக விளையாடி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

சங்கிலியை வாங்கிக் கொள்ள உமா வருவாள் என்று நான் எண்ணியிருந்தேன். மறு நாள் அவள் வீடு பூட்டிக் கிடக்கக் கண்டேன். உமாவும் அவளது பெற்ருேரும் அயலூர் எங்கோ போயிருப்பதாகத் தெரிந்தது. அவள் திரும்பி வருவதற்குள் சங்கிலியை ஒர் ஆசாரியிடம் கொடுத்துச் சரியாகப் பற்ற வைத்து விடலாம் என்று நான் ஆசைப் பட்டேன். நாளைக்குப் பார்க்கலாம்; நாளை ஆகட்டும் என்று வாய்தா போட்டு வந்தேன். அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது, முடிவில்.

அவர்கள் சென்றிருந்த ஊரில், வேகமாகப் பரவிய விஷ ஜுரத்துக்கு உமாவும் பலியாகி விட்டாள் என்று செய்தி கிடைத்தது. எனக்குப் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஆற்ற முடியாத பெருந்துயரை அடைந்து விட்டதாகவே கருதினேன். பாவிகள் எவ்வளவோ பேர் இருக்க, சாவு எனும் தன்டனையை அடைய வேண்டிய கயவர்கள், கொடியவர்கள் எவ்வளவோ பேர் இருக்க, புது மலர் போன்றவளை–வாழ்வின் வாசல் படியிலே இப்பொழுதுதான் அடியெடுத்து வைத்திருந்த யுவதியை–களங்கம் எதுவும் இல்லாத இனியாளை––பாவ நினைப்பையே அறிய முடியாத புனிதத்தை மரணம் ஏன் திருகி எறிய வேண்டும்? இந்த உலகத்தில், மனித வாழ்க்கையில் நீதி நியாயம் தர்மம்

130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/132&oldid=1072883" இலிருந்து மீள்விக்கப்பட்டது