பக்கம்:ஆண் சிங்கம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


காண முடியாது நின்ற மாணிக்கத்துக்கோ அந்த அல றலே பயங்கரமாய், புரிந்து கொள்ள முடியாத மர்ம மாய், உள்ளத்தை என்னென்னவோ பண்ணுவதாய் அமைந்து விட்டது.

அவ்விருவரும் அனுதப்பற்றிப் பேசக்கூடத் தயங்கினர். இனம் புரிந்து கொள்ள முடியாத ஒருவித அச்சம் இருவர் தேகத்தையும் நடுங்க வைத்தது.

மறுநாள் வழக்கம்போல் விடிந்தது. வழக்கமான அலுவல்கள் தொடங்கின. பண்ணையில் வேலை செய்யும் ஆட்களில் ஒருவன் மட்டும் வரவில்லை.

‘திடீரென்று அவனுக்கு என்னவோ ஏற்பட்டு விட்டது. உடம்பெல்லாம் ஒரே ரணம். தீ பட்டது போல் தேகம் வெந்து புண்ணாகியிருக்குது. நெஞ்சுக் கிட்டே பலமான காயம் வேறே. அதெல்லாம் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்தால் அவன் வாய் திறந்து பதிலே சொல்ல மாட்டேன்கிறான் என்று ஒருவன் பண்ணையாரிடம் முறையிட்டான்.

சூரியன் பிள்ளைக்கு இந்தப் பேச்சு எதையோ தெளிவுபடுத்துவது போலிருந்தது. பூசாரி மாடசாமி இசான்னதும் அவர் நினைவில் எழுந்தது. அவர் மாணிக் கத்தையும் கூட்டிக்கொண்டு சுடலைமுத்து என்கிற அந்த நபரைக் கானச் சென்றார் .

அவரிடம் ஒருவன் வர்ணித்தானே அந்த நிலையில்தான் அவன் கிடந்தான். பண்ணையாரைக் கண்டதும் அவன் கண்கள் ஆத்திரத்தோடும், பகைமையோடும், வெறியோடும் அவரை உற்று நோக்கின. அந்தக் கண்கள் ...அவற்றின் பார்வை...பண்ணையாருக்கு தடிப் பன்றியின் நினைவு தானாகவே எழுந்தது. மிகத் தெளி வாக–கண் முன் நிற்பதுபோல்–நிழலாடியது அத் தோற்றம்.

அவர், என்ன சொல்வது என்று புரியாதவராய்...என்ன செய்ய வேண்டும் என்று அறியாதவராய்...மேலும் கீழும் பார்த்தபடி நின்றார். சுடலைமுத்து சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக ஒரு சமயம்

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/74&oldid=1072838" இலிருந்து மீள்விக்கப்பட்டது