பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

101


நடுவணரசின் செருக்குக் கொள்கையை எற்றித் தள்ளியது. இன்னோரன்ன இன்னும் வியம்பப்படாதனவும், வெளியிடக் கூடாதனவுமாக தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலந்தேடு செயல்களையும் உணரின், இவ்வாட்சி பேராயக் கட்சியின் ஆட்சிக்கு நூறுபங்கு மேல் என்றே குரலோங்கிக் கூற வேண்டியுள்ளது. இவையன்றி இது செய்திருக்கின்ற சில துணிவான செயல்களைக் கொண்டு, இனிச் செய்யவிருக்கின்ற செயல்களிலும் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை என்றே கருதவேண்டி உள்ளது.

இனி, இவற்றிற்கெல்லாம் முடிவைத்தாற்போல், கல்வி நிலையில் நம் தமிழக அரசு செய்த சில நற்செயல்களும் உண்டு. அவற்றுள் இந்த ஆண்டு பள்ளி இறுதித்தேர்வுக்காக வைக்கப் பெற்றுள்ள தமிழ்ப் பாட நூலின் அமைப்பும், அந்நூற் கட்டுரை வரிசையுள் முதலாம் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ள தனித்தமிழ்த் தலைவர் திரு. மறைமலையடிகளின் தமிழ்த்தாய் என்ற கட்டுரையுமாகும். இக்கட்டுரையில் பயிலப்பெற்ற கருத்துரைகளுக்காகவும், பன்னிரண்டு முறை பயின்றுள்ள ‘ஆரியம்’ என்ற சொல்லுக்காகவும் பார்ப்பனர் ஆடிய ஆட்டமும், குதித்த குதியும், கொதித்த கொதியும், கரைத்த கரைவும், கத்திய கத்தலும், எழுதிய எழுத்தும்... அடடா! தமிழர்க்குத் தாம் எத்துணையளவு தன்மானத்தீயை எழுப்பி விட்டன! இவற்றை யெல்லாம் கண்டுங் காணாது போலிருந்து உடலை அலப்பிக் கொள்ளாமல் வாளா விருந்து தமிழக அரசு எத்துணைப் பெரிய வெற்றிமாலையைச் சூட்டிக்கொண்டது! அடிகளார் எழுதிய தமிழ்த்தாய் கட்டுரைகூட கொஞ்சம் தண்ணென்றிருந்தது. அடிகளாரின் பணிபோன்ற குளிர்மையான செந்தமிழ்ச் சொற்களே இவ்வாரியப் பார்ப்பனர்களை இத்துணை அளவில் சூடேற்றுமானால், ‘தென்மொழி’ ஆசிரியவுரைகளில் பயிலப் பெறும் சொல் நெருப்புத் துண்டங்கள் அவர்களை எவ்வளவு கொதிப்பேற்றுமோ, நாம் அறியோம்? ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரியப் பார்ப்பனர்களின் ஒவ்வோரெழுச்சியும் தமிழரில் ஒராயிரம் பேர்களைத் தன்மான வுணர்வுடையவர்களாக்கும் ஆற்றலுடையது. ஆரியன் குருதிச்சூடே அவ்வளவில் தோன்றுமானால் தமிழன் குருதிச்சூடு அளவுமானியை உடைக்குந்தன்மை யது என்பதை ஆரிய இனத்துளார் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஆரியர்தம் உள்ளழும்புகளை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்களும் அவர்களுக்குத் துணைபோகும். சுப்பிரமணியப் பிரகலாதன்களும் உணர்ந்துகொள்ளுவார்களாக.