பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பருவத்திலேயே உள்ளன. அவன் மூளையும் குல மத மயக்கங்களால் நன்றாகச் சிதைக்கப்பட்டு உள்ளது. அவன் மனத்தில் தூவப் பெற்ற வேற்றுமை வித்துகள் அங்கும் இங்கும் முளையிட்ட வண்ணமாகத் தான் உள்ளன. தமிழனிடத்து அவ்வப்பொழுது தலைதூக்கும் ஒற்றுமை உணர்ச்சிகளை ஊடுருவி அழிக்க இன்னும் பார்ப்பனர்கள் முனைந்துகொண்டுதான் உள்ளனர். இந்நிலையில் தமிழன்தான் பார்ப்பானாகிக்கொண்டு வருகின்றானேயன்றி ஒரேயொரு பார்ப்பானோ பார்ப்பனத்தியோ தமிழுணர்ச்சி பெற்றுவிடவில்லை. பார்ப்பன வெறுப்புக் குறைந்துபோன தமிழனைப் பார்க்க முடிகின்றதே தவிரப் பார்ப்பனியப் பற்றுக்குறைந்த ஒருவரையே காண முடியாத பொழுது, தமிழ்ப்பற்று மிகுந்த ஒரு பார்ப்பன உயிரைப் பார்ப்பது மிகவும் அரிதாகின்றது. பார்ப்பனர்தம் இன வழக்கத்தை விடாதவரை பார்ப்பனியம் என ஒன்று இருக்கவே செய்யும்.

எனவே தமிழர் இனவொற்றுமை பெறாமல் நாட்டுக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ வந்த அல்லது வருகின்ற எத்துணைச் சிறிய தீமையையும் அகற்றிவிட முடியாது. தமிழர் இனவொற்றுமை பெற வேண்டுமாயின் அவர்கள் தம்மிடம் உள்ள குலவேற்றுமைகளை அடியோடு களைந்துதானாக வேண்டும். மதச் சுவர்களையும் சாதிச் சுவர்களையும் அப்படியப்படியே வைத்துக்கொண்டு நாம் இன நலத்தைப் பேணிவிட முடியாது. நமக்குள் ஒருவரை யொருவர் பகைத்துக்கொண்டு நம் எதிராளியிடமிருந்து வரும் தீமைகளைப் போக்கிவிடுதல் என்பது அறியாமையாகும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளிச் செயலாகும். நம் சாதிச் சழக்குகளை வேரறக் களைந்தாலன்றி நாம் வெற்றியடையப் போவதில்லை. ஆரியப் பார்ப்பனரின் இனவொற்றுமையையும் அவர்தம் அடிப்படைக் கொள்கைகளையும் பார்த்த பின்னாகிலும் நாம் நம் குல இழிவுகளைப் போக்கிக் கொள்ளாமல் இருப்பது நம்மை எத்தனைக் காலமானாலும் அழிவுப் பாதையிலிருந்து மீட்டுக் கொள்ள முடியாமலேயே செய்யும். இதனையுணர்ந்து செயல்படுவோமாயின் நம்மிடை எத்தனை வாரிகளும் பூரிகளும் முளைத்தாலும் அவர்கள் பயனற்றுப் போவார்கள் என்பது திண்ணம். எண்ணிச் செயற்படுவோமாக.

– தென்மொழி, சுவடி : 7, ஒலை : 3, 1969