பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிரமணியத்திற்கு இறுதி எச்சரிக்கை!

பிராமணியம் இந்த நாட்டைக் கெடுத்ததுபோல் வேறு எந்த ஆற்றலும் எந்த நாட்டையும் கெடுத்துவிடவில்லை. ஒவ்வொறு தனி மாந்தனும் இச்த நாட்டில் பிராமணியத்தால் சிதைக்கப்பட்டிருக்கின்றான். அதன் கொடுமைப்பிடியில் சிக்கிய ஒவ்வொருவனும் தன்மானத்தை இழந்திருக்கின்றான்; அறிவை விலை போக்கியிருக்கின்றான்; தன் வாழ்க்கையை ஒரு நாயைப் போலும் பன்றியைப் போலும் நடத்தியிருக்கின்றான். ஏறத்தாழ ஈறாயிரத்தைந்நூறு ஆண்டுகளாய்த் தமிழன் அதில் சிக்குண்டு தன்னையே இழந்திருக்கின்றான். அரசியல் துறையிலும் சரி, குமுகாயத் துறையிலும் சரி, பொருளியல் துறையிலும் சரி, தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கும் எந்த வீழ்ச்சிக்கும் பிராமணியமே முழுக் கரணியமாக இருந்திருக்கின்றது. அதன் நச்சுப் பல்லால் கடியுண்டு சிதைந்து போகாத துறையே இல்லை. பெண்ணை, ஆணை, குழந்தைகளை எல்லாரையும் கடித்துக் குதறி, அவர்களின் சதைகளையும் நார் நரம்புகளையும் அணுஅனுவாய்ச் சிதைத்திருக்கின்றது பிராமணீயம்.

வெள்ளைக்காரன் இந்திய மண்ணை விட்டுப்போய் இருபத்து மூன்றாண்டுகள் ஆகியும், இம்மண்ணில் சரிவர அரசியல் மலர்ச்சியோ, பொருளியல் வளர்ச்சியோ எள்ளத்துணையும் ஏற்படவில்லை யென்பதற்கும் பிராமணியமே கரணியம். அது விதைத்த நச்சு விதைகளே இந்நிலத்தில் வேறு எந்த விளையும் ஏற்படா வண்ணம் கெடுத்து வந்திருக்கின்றது. மக்களிடையில் ஒற்றுமை ஏற்பட