பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

115


புறப்பட்டார்களாமே, அந்த உயிரினங்களின் கொள்கை – கோட்பாடுகளை, அப்படியாக அவர்கள் எழுதி வைத்துக்கொண்டு ஏமாற்றிவரும் ‘வேத’, ‘புராண’ ‘இதிகாச’ விளக்கங்களை! அவற்றால்தான் பண்டைத் தமிழன் இடுப்பொடிக்கப்பட்டான்; அவற்றால்தான் அவன் மனைவி, மக்கள், பிறங்கடைகள் ஆகிய யாவரும் என்றென்றும் மீளா அடிமைகளாக விலைபேசப்பட்டனர். அவற்றில்தான் தமிழர்களின் அடிமைப் பட்டயமே தீட்டிவைக்கப் பெற்றுள்ளது.

அந்த ‘அவை’ இருக்கும்வரை தமிழர்கள் ‘பிராமணர்கள்’ எனப்படுவோரைத் தங்களின் புலத்தை வேறுக்க வந்தவர்களாகத் தான் கருதிக்கொள்ள முடியும். தங்களின் வாழ்க்கைப் பகைவர்களாகத் தான் எண்ணிக் கொள்ள முடியும். தங்கள் முன்னோர்களைப் பழிவாங்கியவர்களாகத்தான் நினைத்துக் கொள்ள முடியும். தங்கள் பின்னோர்களையும் பழிவாங்கக் காத்திருக்கும் கழுகுகளாகத்தான் பேசிக்கொள்ள முடியும். இவ்வியல்பான போக்கிலிருந்து மாறுபடும் தமிழ் உடம்புகளைத் தமிழ் மறவனுக்கோ தமிழ் மறத்திக்கோ பிறந்தவையாகக் கருத முடியாது, ஒருவேளை அவ்வுடம்புகளின் தந்தையோ, அதைப் பெற்ற பாட்டனோ அல்லது அதையும் பெற்ற பூட்டனோ ஆரியனாக அல்லது ஆரியப் பார்ப்பானாக இருந்திருக்கலாம் என்று கருதிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இவற்றையெல்லாம் எழுதுகையில் இவற்றைப் படிக்கப் போகும் ‘அவர்’களின் உள்ளக் கொதிப்பு என்ன என்பதை நான் உணர்வேன். இங்குக் கொட்டப்பெற்ற சொற்கள் எவரெவர் உள்ளங்களைப் புண்படுத்தும், எவரெவர் உயிர்களைக் கொத்தித் தின்னும் என்பதும் எனக்குத் தெரியும். அவை இப்பொழுதுள்ள இவ்விந்தியச் சட்ட அமைப்புகளுக்கு எவ்வெவ் வகையில் மாறுபட்டன என்பதையும் நான் அறிவேன். அவற்றால் என்னென்ன அகப்புற விளைவுகள் நேரும் என்பதையும் நன்கு உணர்வேன். இச் சொற்களைத் தூக்கிக் கொண்டு எத்தனை வீடணத் தமிழர்கள் ஆரியப் பார்ப்பன நெஞ்ச அரிப்புகளுக்கேற்பச் சொரிந்து கொடுப்பார்கள் என்பதையும் ஒருவாறு உய்த்துணர்வேன். ஆனால் அவையாவும் அவற்றின் பிராமணியம் என்னையும் என் முன்னோர்களையும் படுத்திய பாடுகளைவிட மிகமிகக் குறைந்தவையே. இக்கால் நானும் என் தமிழர்களும் படும் பாட்டைவிட மிகவும் சிறியவையே! எனவே அவற்றிற்கெல்லாம் நான் விடைகூற. வேண்டும்; அல்லது தண்டனை ஏற்கவேண்டும் என்று நான் அழைக்கப்படும்பொழுதுதான் என்னையும் என் தாய்நிலத்தையும் இந்தப் பிராமணியம் படுத்திவரும் பாடுகளுக் கெல்லாம் விடிவு ஏற்படும் என்று கருதுகின்றேன். எனவே சொற்களை உணர்வு