பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


மற்றபடி நம் தமிழரிடையேயும் மதத்துறையில் ஆரியத்தையும் தமிழத்தையும் வேறுபாடுணராமல் கடைப்பிடித்து வரும் சமயத் தலைவர் சிலர், “பிராமணர் தமிழருடன் வேறுபாடின்றிக் கலந்துவிட்ட இந்நிலையிலும் அவர்களைப் பிரித்துப் பேசியோ, அவர்தம் முன்னோர் செய்த செயல்களுக்காக இன்றுள்ளோரை இழித்துரைத்தோ வருவது தேவையில்லாதது; தவறானது” என்று கூறத்தான் செய்கின்றனர். எஃது எவ்வாறாயினும், ஓரினம், இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பிறிதோரினத்தின் மனமும் மானமும் வீறுகொள்ளுமாறு தன்னைத் தேவ இனமென்று கூறி, மாந்தச் சலுகைகளை அளவுக்கு மீறிப் பெறுவதும், மற்ற இனத்தை அறவே இழிப்பதும் பழிப்பதும் அவ்வாறு தன் முன்னோரால் எழுதி வைக்கப்பெற்ற பழங்கதைக் குப்பைக் கருத்துகளை இன்னமும் விடாது கூறி அவற்றில் சொல்லப் பெற்ற சடங்கு, ‘சம்பிரதாய’ முறைகளை வலுக்கட்டாயமாகப் பின்பற்றி வருவதுமாக, இருந்து வருகையில், போலியான சில பொது வுணர்வுகளை மட்டும் கூறிப் பிறரை ஆற்றுவிப்பது என்பது இயலாத ஒன்றே. எனவே ஆரியரின் இனவழியினரான இன்றைய பார்ப்பனர் தங்களை எந்த அளவில் திருத்திக்கொண்டு தமிழினத்தவருடன் ஒன்றியுணர்ந்து போக முன்வருகின்றனரோ, அந்த அளவில் தமிழரும் அவர்களை அரவணைத்துக் கொண்டு போகத் தயங்கார் என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இதற்கிடையில் ஆரிய இனத்தால் பெரும்பான்மையும் அலைக்கழிக்கப்பட்டு வந்த – வரும் திராவிட இனம் என்று தங்களைக் கூறிக்கொள்ளுளம் தமிழினத்திற்கும் அதனின்று கிளைத்த தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழியாளர்க்கும் ஒன்றைத் தெளிவாக்க வேண்டியே இதனை எழுதப் புகுந்தோம். அவ்வின, மொழிக்காரர்கள் அனைவரும் இதனைப் படிக்க வாய்ப்பில்லாமற் போகுமென்றாலும், அவர்களுள் வாய்ப்புக் கிடைத்த ஒருசிலரேனும் இக்கட்டுரைக் கருத்துகளை ஊன்றிப் படித்து எண்ணித் தெளிவதுடன் பிறர்க்கும் எடுத்துக்கறுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

பொதுவாக, இன்றைய நிலையில் பிராமணர்கள் எனப்பெறும் ஆரியப் பார்ப்பனர்கள் மக்கள் தொகையில் மூன்று அல்லது நான்கு விழுக்காட்டினரே! இவ்வளவு மிகச் சிறிய அளவினரான ஓரின மக்கள், மிகமிகப் பெரும்பான்மையினரான பிறரை அடக்கி யாள்வதாகவோ, ஏமாற்றுவதாகவோ – குறைகூறப் பெறுவதற்கு முந்தைய வரலாற்றில் எங்கேனும் ஓரிடத்தில் பேரளவில் ஒரு