பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

133


அஃதாவது அவர்கள் அன்று பேசிய எழுதிய மொழியிலேயே சொன்னால் வடநாட்டானுக்கு வால் பிடிக்கின்ற கட்சி ஆண்டு கொண்டிருந்தபொழுது – இவர்கள் கோட்டைப் பக்கம் எட்டிப் பார்க்கவே முடியாதவர்களாக இருந்தார்களே. அப்பொழுது பேசியவற்றிலும் – எழுதியவற்றிலும், கேள்விப்பட்ட – தென்பட்ட செய்திகள்தாம்! சட்டத்திற்குட்பட்ட வகையிலேயே இவை சொல்லப் பெறுவதால் இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர மிகுந்த பாடுகள் படவேண்டியிராது. எண்ணமும் துணிவுந்தாம் வேண்டும். இவற்றால் தனிப்பட்ட நிலையிலோ அரசுக்கோ வருமானம் இராது. ஒரு வேளை அதற்குக் குறைவு வந்தாலும் வரலாம். மக்கள்நலம் கருதி (அப்படி ஒரு கோட்பாடு இருந்தால்) அதையும் பொறுத்துக்கொள்ளலாம்.

முதற்கண், அரசு விடுமுறைகளாக, அலுவலகங்களுக்கும், எதிர்காலத்தையே உருவாக்கவிருக்கும் நம் குழந்தைகள் படிக்கும் கல்விக்கூடங்களுக்கும் இத்தனை விடுமுறைகள் விடுகின்றோமே, அவை தேவைதாமா? நம் அமைச்சர்கள் எத்தனையோ நாடுகள் சுற்றியவர்களாயிற்றே அங்கெல்லாம் இப்படித்தான் விடுமுறைகள் விடப் பெறுகின்றனவா? இல்லையே! இங்கு மட்டும் எதற்கு இத்தனை விடுமுறைகள்? போகட்டும், அந்த விடுமுறைகள்தாம் எதற்கென்று வேண்டாவா? விடுகின்ற விடுமுறைகளில் தொண்ணுறு விழுக்காடு மத விடுமுறைகளே! அவற்றை ஏன் விடுமுறையாக விட வேண்டும்? விருப்ப விடுமுறையாக விட்டுவிட்டுப் போனால் தேவைப்பட்ட மதப்பித்தர்கள் அன்றைக்கு விடுமுறை போட்டுவிட்டுப் போகிறார்கள். பணி செய்பவர்கள் அவர்களுக்குத் தேவையான இன்னொரு நாளில் அதை எடுத்துக் கொள்ளுகிறார்கள். இந்தப் பழக்கம் நம் ஆட்சியிலும் அஃதாவது – பகுத்தறிவாளர்கள் (!) என்று நாம் நம்மைக் கூறிக் கொண்டோமே – நம் ஆட்சியிலும் – தேவைதானா? மாற்றவே முடியாதா? இதற்கும் மாநிலத் தன்னாட்சி வாங்கித்தான் ஆக வேண்டுமா? கொஞ்சம், சட்டத்தைப் புரட்டிப் பாருங்களேன்!

அடுத்து, இந்தச் சிலை(மார்கழி) மாதத்திலும், வேறு திருவிழாக் காலங்களிலும், தெருத்தெருவாக ஒலிபெருக்கிகளைப் போட்டுக் கொண்டு திருவெம்பாவை திருப்பாவைப் பாடல்களைத் தெருப்பாவைப் பாடல்களாக ஆக்கிக்கொண்டு வருகின்றார்களே, அந்த வீண்கத்தல்கள் தேவைதானா? இந்த முறை எந்த வகையில் மதக்கோட்பாடுகளை வளர்க்கின்றது? அந்த மாதத்தில் எழுந்து நீராடக் கூப்பிடும் பாவைப் பாடல்களுக்கு ஏதாவது பொருளிருக்கின்றதா? எங்குப்போய் நீராடுவது நகராட்சிக் குழாய்களிலா, கூவத்திலா? அது