பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆரியப் பார்ப்பானின் மொழிக் குறும்பு!

ரியப் பார்ப்பான் - அவன் சீரங்கத்தில் ‘தர்ப்பைப் புல்’ ஏந்தும் நடராச அய்யனாக இருந்தாலும் சரி, கோயங்காவின் நிழலில் வாழ்ந்து எழுதியே பிழைக்கும் ‘சிவராம’ அய்யனாக இருந்தாலும் சரி - தமிழ் மொழியின் சிறப்பைக் கெடுத்து, அம்மொழியில் ‘அவாளுக்கு’ மிக இனிப்பான ‘சமசுக்கிருத’ச் சொற்களைக் கலந்து எழுதவோ, பேசவோ செய்யவில்லையானால், வாழ்க்கையில் ஒரு நிறைவே இருக்காது! நம் வீடண, ‘பக்தவத்சல', ‘சுப்பிரமணிய', ‘கண்ணதாசன்’களுக்கும், ‘அவாளுக்கு’ப் பக்கமேளம் கொட்டிப் பேசவில்லையானால் தூக்கமே வராது!

சென்ற (சூன்) மாதம், ‘நம்’ கல்வியமைச்சர் நெடுஞ்செழியன் நாகர்கோயிலில், அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழ் ஆசிரியர் கழக மாநாட்டைத் தொடக்கி வைக்கையில் ஒரு கருத்தைச் சொன்னார். அஃதாவது,

“அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பாடங்களைப் பயிற்றுவிக்கும் பொழுது, தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” - என்பது அவர் கூறிய செய்தி,

இச்செய்தி பூணூல் சிவராமன்களுக்கு மிக இனிக்கின்ற செய்தி. உடனே,

“தமிழ் மொழியில் அந்நியச் சொற்கள்” “தமிழ்நாட்டுக் கல்வி மந்திரி வரவேற்கிறார்” என்று தினமணியில் செய்தி வந்தது.