பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


தினமணியா ரஷியா, ஜப்பானை – உருசியா, சப்பான் என்றெழுதப் போகின்றது? இந்த வகையில் நம் விடுதலை, முரசொலி, தினத்தந்திகள் திருந்துவதே இத் தலைமுறையில் நடக்குமா என்பது ஐயம் தினமணி, சுதேசமித்திரன்களை எதிர்பாக்கலாமா? இதுதான் அவர்களின் பிராமணக் குறும்பு ஆயிற்றே!

16. ‘எடுத்துக்காட்டு’ என்னும் சொல் பள்ளியில் படிக்கும் இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவனுக்கெல்லாம் புழக்கத்திற்கு வந்த சொல். ஆனால், ‘உதாரணத்தை’ப் பார்ப்பனர்கள் விட மாட்டார்கள் என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு. இது சாமிநாதய்யர் குறும்பு!

17. ‘இதர’ என்பதற்குப் பிற என்று எழுதிவிட்டால், பூனூல் அறுத்த பார்ப்பானை, அக்ராகரம் மதிக்காததுபோல், ‘தினமணியை’ அவர்கள் மதிக்கமாட்டார்கள். எனவே, இஃது அவர்களின் குலக் குறும்பு!

18. மொத்தம் இச்செய்தியில் வந்துள்ள 84 சொற்களில் 23 சொற்கள். கலப்புச் சொற்கள். ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி கலப்புச் சொற்கள். ஆனால் அந்த 23 சொற்கள்தாம் முகாமையான சொற்கள்; சிறப்புச் சொற்கள். மீதியெல்லாம் பொதுச் சொற்கள்; உரி, இடைச் சொற்கள், மொத்தத்தில் தமிழின முதுகெலும்பை ஆரியமாகவும், அதன் சிற்றுறுப்புகளைத் தமிழாகவும் காட்டி, ஆரியத்தின் உதவியின்றித் தமிழ் இயங்காது என்பதை வழிவழியாக மெய்ப்பித்துக் கொண்டு வரவேண்டுமென்பதே அவர்களின் கொள்கை. இதை நம்மவர்கள் அறியாமலோ அறிந்தோ ஏமாறித் தம்மையும், தங்கள் மொழியையும் தாழ்த்திக்கொண்டு பார்ப்பனீயத்திற்கு என்றென்றும் அடிமையாகக் கிடக்கின்றார்கள்.

இறுதியாக, அந்நிலையினின்று நீங்கும் வரை நெடுஞ்செழியன் போலும் பொறுப்புள்ள அமைச்சர்கள் மிக விழிப்பாகக் கருத்தறிவிக்க வேண்டும். அவர் கூறுவதாக வெளிவந்துள்ள கருத்து. எந்த அளவில் உண்மை என்றே தெளிவாகத் தெரியவில்லை. எனவே, அதைப்பற்றி நாம் இங்கு ஆராய விரும்பவில்லை.

–தென்மொழி சுவடி : 12. ஓலை : 8, 1975