பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேத - மத - இந்தியா!

டந்த நெருக்கடி நிலையின் அதிகாரக் கடுபிடிகளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்துப் பார்ப்பன அதிகாரிகளும் தங்கள் இனத்திற்கு எத்துணையளவு வலிமை தேடிக்கொள்ள முடியுமோ, அத்துணையளவு தேடிக்கொண்டது, எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிந்துவிடாத கமுக்கமான ஒரு செய்தி. தமிழகத்தைப் பொறுத்த அளவில் அன்றைய ஆளுநர் சுகாதியாவும், அவர் செயலர்களாயிருந்த தாவே. சுப்பிரமணியன்களும், கோட்டையில் இருந்துகொண்டு எத்தனை யெத்தனையோ உள்முகத் தமிழ் - தமிழின அரிப்பு வேலைகளைச் செய்து கொண்டு இருந்திருக்கின்றனர்! அவர்களின் சார்பு சலுகை முதலியவற்றைப் பயன்படுத்தி, அன்று எழுந்த, காஞ்சி காமகோடியாரின் பெரியார் பாணிச் சுற்றுச் செலவு இன்றுவரை ஒயவில்லை. இன்றிருக்கும் நிலைகளோ காமகோடியாரின் கால்களுக்கும், வாய்க்கும் இன்னும் வலிவூட்டுவன, தென்பூட்டுவன. ஏனெனில் அவரினத்திற்கு என்றென்றும், தாசர்களாக இருந்து, கால் செருப்பாகத் தேய்வதற்கு முத்தையாக்களும், ‘மகாலிங்க’ங்களும், பக்தவத்சல, சுப்பிரமணியங்களும், ‘கண்ணதாசன்’களும், ‘சிவஞான’ங்களும் ஏராளமாக இங்குள்ளனர்! இந்நிலையில், இந்தியாவை ஆளுவது இந்திராவாக இருந்தால்தான் என்ன; தேசாயாக மாறினால் தான் என்ன? தமிழினத்தைப் பொறுறத்தவரை பேராயக் கட்சியும் சனதாவும் பார்ப்பனியத்தின் இருதலைப் பறவை என்பதே நம் கருத்து. எனவேதான் அரசியல் பொருளியலில் வடவர் ஆளுமையும், அறிவியல், பண்பாட்டியலில் பிராமணியமும் தமிழகத்தில் வேரூன்றுவதற்கான அடிப்படை முயற்சிகள் அனைத்தும் மிகவும் துணிவாகவும், வெளிப்படையாகவும் செய்யப்பெற்று