பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

153


அமைத்த சைமன் குழுவிடம் (Simon Commission), இந்தியாவில் அப்போதிருந்த வேதமதத் தலைவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து, இந்தியாவிற்குத் தன்னுரிமை கொடுக்க வேண்டாம்; எப்போதும் போலப் பிரிட்டிசாரே ஆளுதல் வேண்டும் என்று தம் தூதுவர் வழியாகக் கருத்தறிவித்தனர். இச்செய்தியை இங்குள்ள பலர் மறந்திருக்கலாம். அல்லது இது பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

இவ்வாறு, அவ்விடைக் காலத்தில், ஒருவாறு வலுக் குறைந்தும் அஞ்சிக்கொண்டும் கிடந்த வேதமதம் என்னும் அப்பட்டமான ஆரிய – இந்து – மதம், இக்கால் நச்சுப் பாம்பு தலைதூக்குவதுபோல், காஞ்சி காமகோடிகளின் வழியாகத் தலைதூக்கி வருவதற்கு, வடநாட்டு ஆட்சியாளரின் ஒருமித்த பேரனைப்பே கரணியமாக இருக்கமுடியும். அல்லாக்கால், இந்துமதக் கொள்கைப் பரப்புதலுக்கும், அதன் ஆணி வேரான சமசுக்கிருத மொழி வளர்ச்சிக்கும் இப்படி ஓடோடியும் – வரிந்து கட்டிக்கொண்டும் பரிவுரைகளும், பாதுகாப்புகளும், சலுகைகளும் கொடுத்துப் பார்ப்பனப் பாதந்தாங்கிகளாவார்களா?

சமசுக்கிருத மொழிக்குக் கோடிகோடியாக நல்கைகள் ஒதுக்கப்படுகின்றன. சமசுக்கிருதப் புலவர்களுக்கு மாத ஊதியங்கள் வழங்கப் பெறுகின்றன. சமசுக்கிருத பல்கலைக் கழகம் ஒன்றைத் தென்னாட்டுப் பகுதியில் நிறுவப் பெருமுயற்சி நடந்து வருகிறது. கடந்த சனவரி 1ஆம் பக்கலில் சென்னையில் நடந்த சமசுக்கிருத சம்மேளனம் அம் மொழிக்கு ஆக்கத்தரும் பல வேண்டுகோள்களை நடுவணரசுக்கு விடுத்துள்ளது. காஞ்சி காமகோடியார், இந்து மதமாகிய வேத மதத்தையும் அதற்கடிப்படையாகவுள்ள வேதங்களையும் பற்றி வானளாவும் புளுகுரைகளையும் பொய்யுரைகளையும் ஊர்தோறும் நாள்தோறும் பரப்பி வருகிறார். “இந்துமதம் என்பது ‘அநாதி’; எவ்வாறு நில இயல் வல்லுநர்களாலும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களாலும் உலகம் தோன்றிய காலத்தையும், மாந்தன் தோன்றிய காலத்தையும் சரியாக உறுதிசெய்ய முடியவில்லையோ, அதுபோல் இந்துமதமும் அநாதியானது. எவ்வாறு மற்ற மதங்களின் தோற்றத்தை நாள், வரையரை செய்து கூற முடியுமோ, அதுபோல் இம்மதத்தைக் கால வரையறை செய்து கூறமுடியாது” என்று அறிவியல் பொருத்தமில்லாமல் பேசி வருகிறார். இனி, நாராயண இராமானுச சீயர் என்பவர், சென்னையில் பிப்பிரவரி மாதம் நடந்த, வேதம் வல்லார்கள் பெயரகராதி – மூன்றாவது தொகுதி வெளியீட்டு விழாவில், வேதங்களைப் பாதுகாக்கவும், பயிலவும் பரப்பவும் தென்னாட்டில் ‘வேத விசுவகலாசாலையை’ (வேதப் பல்கலைக் கழகத்தைத் தொடங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.