பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


காட்டப்பெற்று வருகின்றன. இவ்வாறு திட்டமிட்டுப் பிற இனத்தைச் சாய்க்கும் பிராமணரின் நச்சுத்தன்மை நீங்கினால் ஒழிய, இவ்விந்திய நாட்டு அரசியல் சமவுடைமை அரசியல் என்றோ குடியரசுத் தன்மை வாய்ந்தது என்றோ கூறிவிட முடியாது. இனநிலையில் ஆரியத்தையும், மொழி நிலையில் இந்தி, சமசுக்கிருதத்தையும், அரசு நிலையில் வடவர் தலைமையையும் நிலைப்படுத்துவதே என்றென்றும் நடுவணரசுக் கொள்கையாக இருந்து வருகிறது.

‘இந்தியப் பண்பாடு என்பதே வேதகால ஆரியப் பண்பாடுதான்’ என்று அப்பட்டமாக எழுதப்பெற்றும் பேசப்பெற்றும் வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. இராதாகிருட்டிணன் தம் முன்னாளைய இங்கிலாந்துப் பேச்சு ஒன்றில்(Upton Lectures) “ஆரியர்களுடைய வேத கால அமைப்பே, புராண இதிகாசங்களால் வளர்ந்து, பின்னர் திராவிட மக்களுடன் கொண்ட தொடர்பின் விளைவாக இந்தியப் பண்பாடாக வளர்ச்சி பெற்றது” என்பதை உறுதிப்படுத்திப் பேசியுள்ளார். ஆரியப் பண்பாடே, இங்குள்ள நாகரிகம், மதம், கலை, அரசியல் என்றால், அவர்கள்தாமே இங்குள்ள தலைமைப் பதவிகளுக்கும், அதிகாரங்களுக்கும் உரிமையுடையவர்கள் என்பதாகப் பொருள்படும்! பின் எங்ங்ண் இது குடியரசு என்றோ, சமவுடைமை அரசு என்றோ ஆகும் ? இக்கூற்றின் உண்மைப் பொருளை நன்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவேதான், இங்குள்ள அனைத்துத் துறைகளையும் ஆரியப் பார்ப்பனீயம் கைப்பற்றிக்கொண்டு, அவரல்லாத பிறரை ஆளுமைப்படுத்தியும் அடிமைப்படுத்தியும் ஆண்டுகொண்டு உள்ளது. இவ்வகையில் பிராமணர்கள் அனைவரும் ஒருவர்க் கொருவர் ஒத்துழைப்பவர்களாகவும் ஒருங்கிணைந்தவர்களாகவும் ஈடுபட்டு வருவதைத் தமிழர்கள் நன்கு உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். இங்குள்ள தினமணி, இந்து போலும் பச்சைப் பார்ப்பன இதழ்களில், வேத, புராண முயற்சிகளுக்கும் செய்திகளுக்கும் பெரிய எழுத்துகளிட்டு முதலிடந் தந்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. வேத, புராணங்கள் பரவப் பரவத்தான் பிராமணியத்திற்கு எழுச்சியும் காப்பும் ஏற்படும் என்பது இவர்களின் கோட்பாடு. அறிவியல் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்குக் கூட, வேத, புராணத் தொடர்புகளைக் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றுவதில் இவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். நிலா மறைப்பு (சந்திர கிரகணம்) எப்படி ஏற்படுகிறது என்பது அறிவியல் படித்த அனைவருக்கும் தெரியும்! அந்நாளில் கங்கையில் மக்கள் புனித நீராடினர் என்பதை ஒரு செய்தியாகப் பரப்பினால்தான், இவர்களின் வேத, புராணக் கொள்கைகளுக்கு வலிவு ஏற்படும் என்பது இவர்களின் எண்ணம்! எனவே அச்செய்தி அனைத்துப் பார்ப்பன இதழ்களிலும் தவறாமல்