பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களும், தலைவர்களும்கூட வானளாவ உயர்த்திப் பேசி வருகின்றனர். இதற்குப் பிராமணர்களின் பொய்யுரைகளும் புனைவுரைகளுமே கரணியமாக இருக்க முடியுமேயன்றி, வேறு அடிப்படைகள் எதுவும் இருக்க முடியாது; அம்மொழி தேவமொழி யென்னும் குருட்டுக் கொள்கையும் அறியாமை எண்ணமும் இங்குள்ள மாநில ஆளுநர், நடுவண் அமைச்சர்கள் உட்பட அனைவர்க்கும் இருப்பதைப் பார்த்தால், ஒன்றால், இவர்களுக்கு அம்மொழி பற்றிய வரலாறு எதுவும் தெரியாது என்றே எண்ணி, இரங்க வேண்டியுள்ளது; அன்றால் இவர்கள் வேண்டுமென்றே பார்ப்பனீய இனச் சார்பினராக மாறி, அவர்களின் தலைமைக்கும் தில்லுமல்லுகளுக்கும் தங்களை ஒப்புக் கொடுத்துக்கொண்ட அடிமைகளோ என்று கருத வேண்டியுள்ளது. இல்லெனில் இவர்கள் இச் சமசுக்கிருதத்தை ஏதோ ‘தெய்வங்கள்’ பேசுகிற மொழியென்று மயங்கி, அதன் வளர்ச்சிக்குத் தங்களை அடகு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

இக்கால் சமசுக்கிருத வளர்ச்சிக்கென 6–ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2 கோடியே 63 இலக்க உருபாவை அரசு ஒதுக்கியுள்ளது. அம்மொழியின் ஆராய்ச்சி வளர்ச்சிக்கும், கற்பிக்கும் முயற்சிக்கும், அஞ்சல்வழிக் கல்வி, அமைப்புக் கல்வி போன்ற ஏற்பாட்டிற்கும், அம்மொழியை வலுப்படுத்துவதற்கும் அத்தொகை செலவிடப்பட வேண்டும் என்பது அதன் திட்டமாகும். ஏற்கனவே உள்ள ‘தேசிய சமசுக்கிருத’ அமைப்பு நிறுவனத்தின்வழிப் புதுதில்லி, திருப்பதி, சம்மு, பூரி, அலகாபாது ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் சமசுக்கிருதக் கல்வி நிலையங்களில் அம்மொழி பயிலும் மாணவர் ஒவ்வொருவருக்கும் மாதம் 100 உருபா முதல் 250 உருபா வரை உதவிச் சம்பளங்கள் அளிக்கப் பெற்று வருகின்றன. இவ்வமைப்புக்குத் தலைவராக உள்ளவர் நடுவணரசுக் கல்வி, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சரான பர். பி.சி. சந்தர் என்பவர், மக்களின் வரிப் பணத்தில் வாழ்ந்து வரும் இவர், ‘சமசுக்கிருத மொழியை எல்லா வகையானும் வளர்ச்சியுறச் செய்யும்படி அவ்வக்கால் அறிக்கைகள் விட்டுவருவது, மற்ற தேசிய மொழியாளர்க்கு எவ்வாறு நடுநிலைமை தாங்குவதாகும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள 86 பல்கலைக் கழகங்களில், சமசுக்கிருதத்தை ஏறத்தாழ 70 பல்கலைக் கழகங்களிலும் இந்தியை ஏறத்தாழ 65 பல்கலைக் கழகங்களிலும் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும்பொழுது, தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் முதலிய தென் திராவிட மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு ஏன் பத்துக்கும் குறைந்த அல்லது ஒன்றிரண்டு கூடிய