பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


எனவே, அவை சமசுக்கிருதத்தைத் தவிர்த்துக்கொள்ள இயலவே இயலாது. அவற்றிற்கு அது விருப்பமானதாகவும் இல்லை. சமசுக்கிருதத்தைத் தவிர்த்துக்கொள்ள இயலாதபொழுது, அம்மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்து சமயச் சார்பையும் அவற்றின்வழிப் பிராமணியப் பிடிப்பையும் எவ்வாறு அவற்றால் விட்டுவிட முடியும்? இவ் வுண்மையை மொழியளவிலும் அதன்வழி இன அளவிலும், அவற்றின் வழி வரலாற்றளவிலும் நன்கு விளங்கிக்கொள்ளாத நிலையில் தான், தமிழர்களிடையே திராவிட இயக்கம் என்று ஒன்று தோற்றுவிக்கப் பெற்றது. அவ்வாறு தோற்றுவிக்கப்பெற்ற திராவிட இயக்கத்திற்குத் திராவிட நாடு பெறுவது ஒரு தலையாய குறிக்கோளாக விருந்தது. காலப்போக்கில் அவ்வியக்கத்தையும், அதன் குறிக்கோளையும் மிகக் கடினமான கற்பனைகள் என்றுணர்ந்த அதன் தலைவர்கள், அம் மெய்ம்மமல்லாத நோக்கங்களுக்குத் தம் காலத்தையும் முயற்சிகளையும் செலவிடுவது அறியாமை என்று கண்டபின், அவற்றைக் கைவிட்டுவிடத் துணிந்தனர். ஆனால் இத்துணைக் காலம் தம் அறியாமைப் போக்கை நம்பித் தம் உடன்வந்த ஒன்றுமறியாத பல்லாயிரக் கணக்கான பேதை மக்களை உடனடியாக ஏமாற்ற விரும்பாத அவர்கள், அக் கைவிடுப்புக்கு முற்றும் பொருத்தமில்லாத அரசியல் புறக்கரணியங்களைக்கூறி, நெடுநாள் முயன்ற அக் குறிக்கோள்களை, ஒரு நொடிப் பொழுதில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டனர். இவ்வகையில் அவர்களின் பின்னைய தவறுகளின் முன்னைய தொடக்கம் எங்கே இருக்கின்றது என்பதை அவ்வியக்கங்களைச் சார்ந்த தலைவர்களுங்கூட அறியாத உணர்வுடையவர்களாகவே இருக்கின்றனர் என்பதை இரக்கத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. தமிழினத்தின் படிப்படியான தோல்விகளுக்கு அடிப்படையான, அக் கரணியம் என்ன என்பதை இன்னமும் அவர்கள் உணர்ந்துகொள்ள அணியமாக இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில், இப்பொழுதுள்ள குழப்ப நிலைகளிலேயே அவர்களுடைய அரசியல் வாணிகம் நன்கு நடந்துவருகிறது. அதைக் கெடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பாதது, ஆழ்ந்த இன வுணர்வற்றவர்களுக்கு இயற்கையே!

இனி, சமசுக்கிருதம் என்பது அரைச் செயற்கையான ஒரு மொழி என்பதை நம்மில் பலரும் அறியார் மாறாக, பிராமணரின் இந்துமத மயக்கங்களில் தம் மதியைப் பறிகொடுத்த தமிழர், அதை ஒரு தெய்வ மொழியென்றே கருதி, அச்சமும் நம்பிக்கையும் கொண்ட ஓர் உணர்வு கொண்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும், இந்திய அரசின் தலைமை யிடங்களில் உள்ள அதிகாரிகளும், பிற பார்ப்பனத் தலைவர்களும்