172
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
பல சான்றுகளுடன் நிலைநாட்டுவர் கேம்பிரிட்சு வடமொழிப் பேராசிரியராகிய இராப்சன்(Rapson) என்னும் அறிஞர்.
இன்னும் தமிழ்மொழி சீரிழந்து போனதற்கும், தமிழினம் சீரழிந்து போனதற்கும் சமசுக்கிருதமும் ஆரியப் பார்ப்பனருமே தலையாய கரணியமும் கரணியரும் ஆவர். சமசுக்கிருதத்தை வேண்டுமென்றே ஆள் பெயர், ஊர்ப் பெயர், நாட்டுப் பெயர், கோவில் பெயர் அனைத்திலும் புகுத்தியவர்கள் சமசுக்கிருத வெறியர்களே. பார்த்தசாரதி கூறுவதுபோல் தமிழில் இன்னும் வெறியர்கள் தோன்றவில்லை. தமிழ் வெறியர்கள் ஒரு பத்துப் பெயராகிலும் இருப்பாரேயாகில், உண்மைத் தமிழகத்தில் பார்த்தசாரதியும் இரார்; ‘துக்ளக்’கும் இருக்காது. ஒருவேளை இருந்தாலும் பார்த்தசாரதி மார்பில் பூணூலும், ‘துக்ளக்’ இதழில் பெயருடன் கலப்புத் தமிழும் இல்லாமலிருந்திருக்கும். நிலை அவ்வாறில்லாமல் இருப்பது ஒன்றே பார்த்தசாரதி கூறும் தமிழ் வெறியர்கள் யாரும் இங்கு இல்லை என்பதை உணர்த்தும்,
பார்த்தசாரதி கூட்டத்தினரின் சமசுக்கிருத வெறி இத்தமிழகத்தில் எப்படிச் செயற்பட்டது என்பதற்கான சான்றுகள்:
மாற்றப்பட்ட ஆட்பெயர்கள்:
வடமொழிப்பெயர் | பொருள் |
கேசவன் | மயிரான் |
பூவராகன் | நிலப்பன்றி |
கும்பகர்ணன் | குடக்காதன் |
மண்டோதரி | பானைவயிறி |
சூர்ப்பநகா | முறம்பல்லி |
காமாட்சி | காமக்கண்ணி |
மீனாட்சி | கயற்கண்ணி |
ஸ்வர்ணாம்பாள் | பொன்னம்மை |
மாற்றப்பட்ட கடவுள் பெயர்கள்:
தமிழ் | வ.சொல் | |
பொன்னன் | ஹிரண்யன் | |
அரவணையன் | சேஷசாயி | |
அடியார்க்கு நல்லான் | பக்தவத்சலம் | |
அம்மையப்பன் | சாம்பமூர்த்தி | |
தூக்கிய திருவடி | குஞ்சிதபாதம் | |
தென்முகநம்பி | தக்ஷணாமூர்த்தி | |
மங்கைபாகன் | அர்த்த நாரீசுவரன் | |
உலகநம்பி | ஜகநாதன் |