பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மதமெனும் பெயரால் நடைபெறும் பொதுத் தொல்லைகளை அரசு தடுத்து நிறுத்துதல் வேண்டும்

நாம் வாழும் இவ்விந்திய நாடு வறுமை மிகுந்த நாடு; அத்துடன் அறியாமை நிறைந்த நாடு. ஆனால் மக்கள் பெருக்கமுடைய நாடு. நாட்டு மக்களில் எண்பது விழுக்காட்டினர் வறுமை மிக்க ஏழையராகவும், தொண்ணூறு விழுக்காட்டினர் அறியாமை நிரம்பிய மூடநம்பிக்கைகள் மிகுந்தவர்களாகவும் இருப்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும். எனவேதான், இங்குப் பணம் படைத்தவர்களும் மதச் செருக்கர்களுமே பெரும்பாலான ஏழை மக்களை ஏமாற்றியும் சுரண்டியும் அடிமைகளாக்கியும், இதனை ஒரு கொடுமைமிக்க நாடாக ஆக்கி வருகின்றனர். அறியாமையும் ஏழைமையும் மிகுந்த நாட்டிற்குக் குடியரசுரிமை கிடைத்தது, செல்வக் கொள்ளையர்களுக்கும், மதக் கொள்ளையர்களுக்குமே வாய்ப்பாக அமைந்தது. அவ்விரு வகையினரும் மக்களை நசுக்கிப் பிழிந்து, அவர்களின் உழைப்பைப் பெற்றுத் தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், அவர்களை மத மூட நம்பிக்கைகளில் வீழ்த்தி அறியாமையினின்று மீள முடியாதவர்களாக அழுத்தி வைக்கவும் முடிகிறது. இவ்விரு நிலையினரே பதவிகளைக் கைப்பற்றவும்