பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

183


'மகாவிளக்கு’ பார்க்கப் போகாதவர்களுக்கும் அவ் வொலிபெருக்கி இரைச்சல் எதற்கு? இல்லை, அரசு, நாட்டிலுள்ள அனைவருமே, நாடு நகரங்களை வெறுமையாக்கி விட்டு விட்டு அங்குப் போய், அந்த ‘மகாவிளக்கு’க் காட்சியில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறதா?

இனி, இதுபோலவே, சிலை(மார்கழி) மாதத்தில் மிகுகாலைப் பொழுதில் அலறுகின்ற ஒலிபெருக்கிகளில் ஒரிரு திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் மட்டும் வைத்துவிட்டு, அவற்றைத் தொடர்ந்து, இழிவும் இழுப்பும் நிறைந்த கழிகாமத் திரைப்படக் குக்கலிசைகள் ஆரவாரிப்பது எந்த அமைச்சருடைய காதுகளையும் புண்படுத்தவில்லையா? அல்லது அவர்கள் நகருக்கு வெளியே தன்னந் தனியிடத்தில் அளாவிக்கட்டிய வளமனைகளில், வளிநிலைப்பாட்டு அறைகளில் படுத்துத் துரங்கும் வாய்ப்புகளால் கொண்ட புறக்கணிப்பா? ஏன் இந்நிலைகளைத் தடைசெய்யக் கூடாது? ஏற்கனவே வீட்டுக்கு வீடு, அண்டையயல் வீட்டுக்காரர்கள் விரும்பியோ விரும்பாமலோ, அலறியடிக்கும் வானொலிப் பெட்டிகளின் இரைச்சலுடன், தெருவுக்குத் தெரு கதறியெடுக்கும் ஒலிபெருக்கிகளின் வல்லிரைச்சலும் சேர்ந்து நகரத்தையே நரகலாக்கிக் கொண்டிருக்க வில்லையா? இதை ஏன் அரசு கவனிக்கவில்லை? மதக்கொழுப்பர்களின் மனம் புண்படக் கூடாது என்பதாலா? அல்லது அவர்களே மதமூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டதாலா? இத் தவிர்க்க வியலாக் கொடுமைச் சூழல்களால் அமைதியான வாழ்க்கை வாழ விரும்பும் பிறருடைய மனங்களும் செவிகளும் புண்படாவா?

இவை தவிர ஆடவை, கடக (ஆனி, ஆடி) மாதங்களில் தெருக்கள் தோறும், சந்து பொந்துகளிலும் மூலை முடுக்குகளிலும், நெடுஞ்சாலை ஓரங்களின் இடையிலும் முளைத்துக் கிடக்கும் மாரியம்மன்களுக்கு, மாறி மாறி விழாவெடுக்கும் நோக்கத்துடன், கொட்டு முழக்குடன் கூடிய ஒலிபெருக்கி இரைச்சல்களுக்கு அளவுண்டா? இன்னும் அவ்விழாக்களை நடத்தும் குடிகாரர்களும், குடிகேடர்களும், கொடிய அரம்பர்களும், மூடநம்பிக்கை மூஞ்சூறுகளும், அண்டையிலும் அயலிலும் உள்ள குடியிருப்புக்காரர்களிடம் கும்பல் கும்பலாகப் போய் ஐந்து, பத்தென்றும், தெருக்களில் வருவோர் போவோரிடமும், சாலைகளில் வ்ரும் போகு ர்டிகளில் உள்ளோரிடமும், உண்டியல்களை ஏந்தியும் கொள்ளையடித்தும், வழிப்பறித்தும், இடர்ப்படுத் ல்களை என்னென்று சொல்வது? இதைவிட எப்படி எழுதிக்காட்டுவது? ஏன் இது பொதுத் தொல்லை (Public Nuisance) ஆகாது? இது பற்றி அமைச்சர்களுக்கு