பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

185


சைமினியம் ஆகிய வேதாந்த மதங்களும்; பெளத்தம், வைரவம்; காளாமுகம், சூனியவாதம், உலோகாயுதம், சமணம் ஆகிய புறமதங்களும்; வாமம், மாவிரதம் முதலிய அகச் சமயங்களும்; தார்க்கியம், மீமாம்சம், ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலிய சிறு சிறு கலவை மதங்களும், ஆக முப்பத்தாறு மதங்களும்; இன்னும் கிறித்துவ மதத்தில் உரோமன் கத்தோலிக்கம், உலூதரம், புரோட்டசுடன்டியம், உரோமானியம், பாப்டிசம், வேசுலியனம், வொயிட்பீல்டி சுடியம், கால்வனிசுட்டம், ஆண்டினோமியனியம், பிரசு பிடேரியனியம், யூனிடேரியனியம், இலண்டனியம், இசுகாட்டியம், சுவீடன் பர்கீயனியம், பிரிமேசனியம், கிரேக்கியம், கீனியாயம் முதலிய பத்தொன்பது சிறு மதப் பிரிவுகளும்; இசுலாம் மதத்தில் சியாம், சுன்னி என்னும் இரு மதப் பிரிவுகளும், இவையன்றிப் பாரசிகம், கான்பூசியம், சாயியம், இராமகிருட்டிணம், அரே இராம அரே கிருட்டிணம், துவைதம், அத்துவைதம், துவைதாத்வைதம், மத்துவம் முதலிய எண்ணிறந்த மதங்களும் தோன்றி நடைமுறையிலுள்ளனவும், தோன்றிக்கொண்டே இருப்பனவும், இந்நாட்டு மக்களின் மூளைகளையும் நெஞ்சங்களையும் என்றென்றும் மேம்பாடடையச் செய்யாமல் அழுத்தி வைத்துக்கொண்டுள்ள நிலை எத்துணை இரங்கத்தக்கது! இனி, இவையல்லாமல் சிற்றூர்ப்புறங்களில் உள்ள காட்டேரி, கருப்பன், வீரபத்திரன், மதுரைவீரன் முதலிய சிறு குலதெய்வங்கள் எத்தனை! எத்தனை! இவற்றுக்கெல்லாம் செய்யப்பெறும் வேடிக்கைகள் எத்தனை! விழாக்கள் எத்தனை ! இவற்றா லெல்லாம் பொது மக்கள் அனைவர்க்கும் எத்தனை யெத்தனைத் தொல்லைகள்! இடையூறுகள்! இடர்ப்பாடுகள்!

ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி போதவில்லை என்று வாய் கிழியக் கத்துவது! கூச்சலிடுவது! மறுபுறம் மக்களை இன்னும் காட்டு விலங்காண்டித்தனத்திலேயே நிலைபெறும்படி அழுத்தி வைத்திருப்பது! எத்தனை முரண்பாடான போக்கு இந்த நாட்டில் போடப்பெறும் முன்னேற்றத் திட்டங்கள் அனைத்தையும் மூழ்கடிக்கும் வகையில் இங்குள்ள மதப் பெருக்கங்களை - மூட நம்பிக்கைகளை மக்களிடம் பெருக்குவதை எவர் மறுக்க முடியும்! காஞ்சி காமகோடியார் போலும் சங்கராச்சாரியார்கள், அறிவு வளர்ந்தாலும் வளராவிட்டாலும், மக்களிடம் உள்ள மத மூடநம்பிக்கைகள் போய்விடக் கூடாதே என்னும் கவலையினாலும் கருத்தினாலும், எவ்வளவுக்ககெவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு பார்ப்பன அடிமைக் கும்பல்களை வைத்துக்கொண்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் (வண்டியில் போனால்