பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘இந்து’ மதத்தினின்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும்!

க்களை அடையாளம் காட்டுவதற்குரிய குறிப்புப் பெயர்களுள் மதமும் சாதியும், நாட்டுக்கு அடுத்தபடி மிகவும் முகாமை பெற்றனவாகக் கருதப் பெறுகின்றன. விரும்பியோ விரும்பாமலோ, ஒருவர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராகவே இருத்தல் வேண்டும் என்பது அண்மைக் காலம் வரை கடைப்பிடிக்கப் பெற்று வந்த அல்லது வரும் ஒரு நடைமுறை. இம் முறை, மக்கள் மதங்களுக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்ட காலந்தொட்டு இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவனை அவன் பிறந்த நாடு, பெற்றோர்கள், வைத்துக்கொண்ட பெயர், உயரம், எடை, உறுப்பு அமைவுகள் முதலியவற்றால் மட்டுமே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடிவதாக இருந்தாலும், அவன் கடைப்பிடித்தொழுகுகின்ற மதத்தையும், அவன் பிறந்துள்ள குலம் அல்லது சாதியையும் அடையாளம் கூறியாக வேண்டும் என்பது, மத ஆளுமைக்காரர்கள் அல்லது மதத் தலைவர்கள் ஏற்படுத்திவைத்த ஒரு தேவையற்ற மூடக் கொள்கையாகும். குழு இன ஆட்சிக்காலத்தில், தங்கள் இனத்தவர்களே வலுப்பெற வேண்டும், பிற இனத்தவர்கள் நம்மிடையில் ஊடுருவிவிடக் கூடாது என்ற நினைவுடன், குல, இன, அடையாளங்களும், மத ஆட்சிக்காலத்தில் தங்கள்