பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

19

ஒழுக்கக் கேடுகளுக்குத்
தூண்டுகோல்!

இக்கால் மாணவர்களுக்கிடையில் உள்ள போராட்ட உணர்ச்சிகளுக்கும் பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்கும் பெரும்பாலும் பார்ப்பன மாணவர்களே தூண்டுகோலாயிருக்கின்றனர். கிருதா வைத்துக்கொள்ளுதல் முதல் தலைமயிரை அலங்கோலமாய்க் கலைத்து விட்டுக் கொள்ளுதல், உடைகளைப் பல வண்ணங்களிலும் வகைகளிலும் தைத்துக் கொள்ளுதல், இப்பி போல் நடந்து கொள்ளுதல் வரை அனைத்துக் கோமாளிக் கூத்துகளுக்கு நிலைக் களனாக இருப்பவர் பார்ப்பன மாணவர்களே. இத்துறையில் பார்ப்பனப் பெண்களும் விலக்கல்லர். நோய் குடிகொண்டுள்ளதற்குப் பார்ப்பனர்களின் அமெரிக்கப் பாலியல் வெறியே அடிப்படைக் கரணியம். சென்னையில் பார்ப்பன இளைஞர்கள் சிலரிடம் உள் வெளிநாட்டுப் பாலியல் இதழ்கள், படங்கள், திரைப்படச் சுருள்கள் முதலியவை இருப்பதாகக் கேள்விப்பட்டு மிக வருந்த நேரிட்டது. இவ்வாறு நாட்டை அழிம்பு நிலைக்குக் கொணரும் பார்ப்பன இனம், அதற்கு வேறு எவரையோ கரணியங் காட்டித் தம் சமயத்துறைக்கு மறைமுகமாக நல்ல வரவேற்பைத் தேடிக் கொண்டிருக்கின்றது.

சமயத்துறையில் ஆரியப் பார்ப்பனர் செய்யும் அடாத செயல்களுக்கு அளவே இல்லை. கடவுளர்களுக்கு இவர்களே சொந்தக்காரர்கள்போல் இவர்கள் நடந்துகொள்ளும் முறைகள் மற்ற இனத்தாரை வெறுப்படையச் செய்கின்றன. அலுவலகங்களில் நிகழ்த்தப் பெறும் கருவிப்பூசை (ஆயுத பூசை) கலைமகள் பூசை (சுரசுவதி பூசை) முதலியவற்றிற்கும் அவர்களே கரணியம். விளக்கணி விழா (தீபாவளி) நாட்களில், குறைந்தது பத்து பதினைந்து நாட்கள் தெருக்களில் நடமாட முடியாமல் செய்யும் வகையில் குவியல் குவியலாக வெடிகளைக் கொளுத்திப் போட்டுக் காட்டுத்தனமாக வெறிக்கூச்சல் இட்டுக்கொண்டு ஊரையே அலைக்கழிப்பதும் அவர்களே ! நம் மக்களில் ஒரு சில செல்வக் குடும்பங்களே அவர்களை பின்பற்றி அவ்வாறு செய்கின்றன. இவர்கள் விளக்கணி விழாவைக் கொண்டாடுவது போல் பொங்கலைக் கொண்டாடுவது இல்லை. மேலும் சிலை (மார்கழி) மாதங்களில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை ஒலிபெருக்கிகளைப் போட்டுக்கொண்டு பாவைப் பாடல்களை இப் பார்ப்பனப் பூசாரிகள் முழக்குவதும் கொட்டுமுழக்கோடு கூடிப்