பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சேலம் உருக்காலைக் குடியிருப்பில் பார்ப்பனரின் கொட்டம்!
அங்குள்ள பள்ளியில் ஆங்கிலம், இந்தி, சமசுக்கிருதம் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் கொடுமை!

தமிழ்மொழி அறவே புறக்கணிக்கப் பெறுகிறது!

தமிழ்நாட்டிலேயே இந்த நிலைமை என்றால், தமிழன் தமிழ்மொழியைப் படிப்பது எங்கு? எப்போது?

தமிழ்நாட்டு அரசு இதுபோன்ற கொடுமைகளையெல்லாம், தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்தவில்லையானால் தமிழின் எதிர்காலமே இருண்டு போகும்!

அரசு உடனே தலையிட்டு ஆவன செய்க!

சேலம் உருக்காலை(Steel Plant)க்கென மோகன் நகர் என்னும் பெயரில் நகரியம்(Township) ஒன்று உள்ளது. இம் மோகன் நகரில் ஏறத்தாழ 250 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இக் குடும்பத்தினரின் பிள்ளைகளும், அதனைச் சுற்றியுள்ள சிற்றுர்களில் வாழ்ந்துவரும் உருக்காலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளும் படிப்பதற்கென ஒரு தனியார் பள்ளி உண்டு. இதன் பெயர் ‘வித்யா மந்திர்’ (தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப் பெறும்