பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

217

வேண்டும். இந்துமதம் இந்தியாவை விட்டு உலக நாடுகள் எதிலும் கால்கொள்ள முடியாது. ஏனெனில் அஃது அறிவியலுக்கு மாறுபட்ட ஒரு மதம். எனவே அறிவியலுக்கு மாறுபட்ட, மூடநம்பிக்கைகளையே அடிப்படையாகக் கொண்ட, ஓரினம் மட்டுமே பிழைப்பதற்குக் கருவியாக உள்ள இந்துமதம், இந்தியாவில் நிலைப்பட வேண்டுமானால், அஃது இரண்டு அடிப்படையான வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும். ஒன்று, அம்மதக் கருத்துகளுக்கு அடிப்படையான சமசுக்கிருத மொழியை அது வளரச் செய்ய வேண்டும்; அல்லது மறைந்துபோகாமல் காத்துக்கொள்ள வேண்டும். இரண்டு, இந்துமதக் கொள்கைகளை அடியோடு ஒழித்துக்கட்ட வல்லனவும், மக்களைச் சமமாக மதிக்கின்ற கொள்கைகள் கொண்டனவுமான, அஃதாவது வருணாசிரமத்திற்கு மாறுபட்டனவுமான கிறித்தவம், இசுலாமியம் போன்ற புற மதங்கள் இந்தியாவில் பரவுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். இந்த இரண்டு கொள்கைகளும் அவற்றை நோக்கிய செயற்பாடுகளும் வலிந்த முறையில் பரவினால்தான், பிராமணியம் அஃதாவது ஆரியப் பார்ப்பனியம் இந்த நாட்டை முழுவதுமாக கவர்ந்து (ஆக்கிரமித்துக்) கொள்ள முடியும். எனவே, அத்தகைய முயற்சிகளைத்தாம் பார்ப்பனிய இயக்கங்கள் அனைத்தும், குறிப்பாக ஆர்.எசு.எசும், விசுவ இந்து பரீட்சத்தும், அரவிந்த ஆசிரமத்துப் பணத்தை வைத்துக் கொண்டு செய்ய முயற்சி செய்கின்றன.

அரவிந்த ஆசிரமம் சமசுக்கிருதத்தை உலகமொழி யாக்குவதற்கு ஒதுக்கிய 800 கோடி உருபாவுக்கு மேலும் அவ் வியக்கங்கள் ஆரியத்திற்குத் துணையான செல்வர்களிடமிருந்து நிறையப் பணத்தைத் திரட்டத் திட்டமிட்டிருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் இலக்கக் கணக்கான பணம் திரளுகிறது. குறிப்பாக, பார்ப்பனிய அடிமைகளாக உள்ள முத்தையா மகாலிங்கங்கள் போன்ற தமிழினச் செல்வர்களே, இந்து மதத்தின் மேலும் சமசுக்கிருதத்தின் மேலும் கொண்ட அறியாமை வெறியினால், அவர்களின் முயற்சிக்குத் துணைபோவது, அவர்களுக்குப் பெரிய ஆக்கமாக இருக்கிறது.

நம் தமிழக அரசும், பார்ப்பனர் மனம் புண்படக்கூடாதே என்ற வகையில், அவர்களின் முயற்சிக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபோவது தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்.எசு.எசின் முயற்சியால் வடநாட்டுப் பெண் முதலையாகிய பிர்லா மட்டும் தம் பணத்தில், மதமாற்றங்கள்