பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காஞ்சி காமகோடி பீடத்தலைவர் ஒரு குமுகாயக் குற்றவாளி!

தெருவிலே ஒர் ஒரத்திலே நாடாவைச் சுற்றி விளையாடும் சூதாட்டத்தைப் பார்த்திருப்போம். சுற்றி நிற்பவர்களில், அந்த நாடாவைச் சுற்றி சூது செய்பவனைச் சேர்ந்தவர்கள், அந்த நாடாவில் ஒரு குச்சியைச் செருகுகையில், அது அதில் சிக்கிக் கொள்ளும். உடனே அவர்கள் வைத்த பந்தயக் காசுக்கு இருமடங்குக் காசு கிடைக்கும். இதைப் பார்த்த மற்றவர்கள், அஃதாவது அந்த நாடாச் சூதைபற்றி ஒன்றுமே தெரியாத பொது மக்கள், அதே மாதிரி, பந்தயத்தில் வெற்றிபெறும் நோக்குடன், தாங்களும் அதில் பந்தயங்கட்டி, கட்டிய காசை இழந்து போவதுடன் மேலும் மேலும் தங்கள் கையிலுள்ள, மடியில் உள்ள காசு, பணத்தை யெல்லாம் இழந்துகொண்டே வந்து, இறுதியில் ஒட்டாண்டியாக வீடு திரும்புவார்கள். எனவே, இவ்விளையாட்டை ஒரு சூதாட்டமாகக் கருதி இதை அரசு தடைசெய்கிறது.

இதேபோன்ற சூதாட்டமான போக்குதான், காஞ்சி காமகோடி பீடத்தலைவர் அவர்கள் செய்துவரும் மதச்சூதும். அவர் ‘உலக குரு’ என்று தம்மை அறிவித்துக்கொள்வதும், அவரும் அவரைச் சார்ந்தவர்களும அவர் ‘ஒரு நடமாடும் தெய்வம்’ என்று ஒன்றுமறியாத, ஆனால் மதப்பித்தம் பிடித்த ஏழை, எளிய