பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


புகட்டுவதாகும். இதுவும் இந்த நாட்டில்தான் நடைபெற முடிகிறது. அரசனே, மக்களில் ஒருவரைத் ‘தெய்வம்’ என்றும், அவர் பேசுவதைத் ‘தெய்வத்தின் குரல்’ என்றும் ஏற்பதனால், மதிப்பதனால், மக்கள் அவரைப்பற்றி என்ன தான் நினைக்க மாட்டார்கள்? இந்த நிலை மக்களின் அறிவு முன்னேற்றத்திற்கும், வாழ்வியல் முயற்சிகளுக்கும் எத்துணைத் தடையாக அமைந்துவிடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே, இக்கொடுமையான ஏமாற்றுப் போக்கு, ஒரு குமுகாயக் குற்றமாகக் கருதப்பட்டு அரசியல் சட்டத்தால் தடைசெய்யப் பெறுதல் வேண்டும். தடுக்கப்பெறுதல் வேண்டும் என்பதை அரசுக்கும், அறிஞர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். பொது மக்களும் இதுபற்றிச் சிந்திப்பார்களாக!

- தமிழ்நிலம், இதழ் எண் : 13, 1983