பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


ஆராய்ச்சியிலும் ஊக்கமும் ஆக்கமும் காட்டுவதாகக் கூறி விளம்பரப்படுத்திக் கொண்டு, மக்களின் அறிவு வளர்ச்சியில் தமக்கு ஏதோ அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் இந்திரா அரசு, மறுபுறம் இது போலும் மூடநம்பிக்கைகளும் அறியாமையும் நிறைந்து, மக்களை முன்னேற்றப் பாதையிலிருந்து அடியகற்றும் இந்துமதக் கூத்தாட்டங்களுக்குப் பெரிதும் துணைபோவதும் ஊக்கமளிப்பதும் எத்துணைத் தந்திரமான அரசியல் சூழ்ச்சி என்பதை ஏழைப் பொதுமக்கள் அறவே உணர்ந்துகொள்ளல் இயலாது.

இந்திராவின் ஆரியத்தனமான அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பெரிதும் கைகொடுத்து உதவும் கருவியாக இந்துமதம் இக்கால் வலிவுபடுத்தப்பட்டு வருகிறது. மக்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தினால்தான், தம் அரசியல் சூழ்ச்சிகளை அவர்கள் உணர முடியாது என்பது இந்திராவின் சாணக்கியக் கொள்கை. இந்தக் கொள்கையையும், இந்திமொழியையும் கருவிகளாக வைத்தே, தேசிய ஒருமைப்பாட்டை நன்கு வேர் ஊன்ற வைத்துவிடமுடியும் என்று தவறாகக் கணக்குப் போடுகிறார், இந்திரா!

அண்மையில் அவர், இந்தியில் உருவாக்கப் பெற்ற ஒர் அறிவியல் அகராதியைப் புதுதில்லியில் வெளியிட்டுப் பேசுகையில், இந்திமேல் கொண்ட அவரின் தணியாத பற்று நன்கு வெளிப்பட்டு இருக்கிறது. “நாட்டில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த இந்தியை இணைப்பு மொழியாக ஏற்பது இன்றியமையாதது. இந்திமொழியைக் கற்பதில் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் அனைவரும் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளார்கள். ஆனால் அரசியல் ஊதியத்துக்காக, இதைத் தடுக்கத் தென்மாநிலங்களில் உள்ள சிலர் முயல்கின்றனர்” என்று இந்திரா காந்தி கூறியுள்ளார். அவர் தென்மாநிலங்கள் என்று கூறியிருந்தாலும், தமிழகத்தையே அவ்வாறு குறிப்பிடுகிறார் என்று கொள்ள வேண்டும். ஏனெனில், வேறு தென்மாநிலங்கள் எதிலும் இந்தியை ஏற்றுக்கொள்ள எவரும் தயங்கியதில்லை. அங்கெல்லாம் மும்மொழித் திட்டமே நடைமுறையில் உள்ளது.

எனவே, இந்தக் கூற்றில் அவரின் இரண்டு உள்நோக்கங்கள் தெளிவாகப் புரிகின்றன. ஒன்று, இந்திமொழியை எப்படியாவது முழுமையாக இணைப்பு மொழி ஆக்கிவிடுவது. இரண்டு, இதற்குத் தடையாக உள்ள தமிழகத்தை எவ்வாறேனும் முறியடிப்பது; அல்லது கீழ்ப்படியச் செய்வது. முன்பெல்லாம் இந்தியைத் தெற்கே